video song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
video song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 ஜூன், 2026

Vanna Mayil Erum Murugan Song Lyrics in Tamil | வண்ண மயில் ஏறும் என் தங்க வடிவேலோ பாடல் வரிகள் தமிழில்

 


விழிக்கு துணை திரு மென் மலர் பாதங்கள்

மெய்மை குன்றா மொழிக்கு துணை, முருகா எனும் நாமங்கள்

முன்பு செய்த பழிக்கு துணை, அவன் பன்னிரு தோளும்

பயந்த தனி வழிக்கு துணை, வடி வேலும் செங்கோடன் மயூரமும்




வண்ண மயில் ஏறும் என் தங்க வடிவேலோ

கந்தன் உன்னை காண தினம் ஓடி வருவேனோ

செந்தமிழை காக்கும் வேல், சேவல் கொடியானோ

எண்ணி எண்ணி பாடும் என்னை

கந்தன் அறிவானோ


தோளிலே பால் காவடி சுமந்து

ஓடினேன் மேடு பள்ளங்கள் கடந்து

அடினேன் அவன் ஆலயம் நுழைந்து

பாடினேன் வடிவேலனை நினைத்து


தந்தைக்கு உபதேசம் செய்து சுவாமிமலை ஆள்பவன் நீ

மாம்பழத்தில் கோபம் கொண்டு பழனி மலை ஆண்டவன் நீ

பொங்கும் கடல் ஓரமாக செந்தூரிலே வாழ்பவன் நீ

வள்ளி தெய்வயானையுடன் திருத்தணிகை நாயகன் நீ


தனக்கொரு தனித்துவ படையென நிலமென

வான்மயில் ஏறியவன் முருகன்

பாதங்கள் சொன்ன மகன்


யாரும் எனக்கில்லை என நாதியற்று நான் கலங்க

ஆறுதல் தந்த மகன் முருகன்

ஆறுதோள் வென்ற மகன்


வா, என்னைக் காக்கும் வடிவேலாயா

நீ இன்றி வேறு துணை யாரையா


வா, என்னைக் காக்கும் வடிவேலாயா

நீ இன்றி வேறு துணை யாரையா யாரையா


பொதிகையில் பிறந்து முருகன் வளர்ந்த கதையும்

பிரணவப் பொருள் மறந்ததில் வேல் சினந்தன்று கொடுத்த சிறையும் 

வள்ளி தெய்வானையுடன் காட்சி அருளும்

தணிகையின் நாயகன் உன்னை காணயில் இன்னல் ஓடி மறையும்


வா, என்னைக் காக்கும் வடிவேலாயா

நீ இன்றி வேறு துணை யாரையா


Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil

Odi Odi Odi Utkalantha Sivan Song in Tamil

Vishnu Sahasranamam in Tamil

புதன், 27 மே, 2026

Thiruppavai Pasuram - 26 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 26 பாடல் வரிகள் தமிழில்

 

மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்


மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்


ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன


பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே


போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,


சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,


கோல விளக்கே, கொடியே, விதானமே,


ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்




Thiruppavai Pasuram



Thiruppavai Pasuram - 1

Thiruppavai Pasuram - 30

Thiruppavai Pasuram - 28

செவ்வாய், 26 மே, 2026

Kurai ondrum illai Perumal devotional song | குறை ஒன்றும் இல்லை பெருமாள் பக்தி பாடல்

 

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா



Kurai ondrum illai Video Song


கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா

கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா


வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க

வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா


திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா

உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்

உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்

என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா



குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா…

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா


குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா


கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி

நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா

நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா



யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்

யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்

ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…..


Kandhar Anupoothi

Subramania Pujangam

Shanmugan Kavasam

திங்கள், 25 மே, 2026

அரோகரா கோஷம் முருகன் மந்திரம் | Arrokara Kosham Murugan Mantra in Tamil

 


Arrokara Kosham Murugan Mantra



Thiruppavai Pasuram - 28

Thiruppavai Pasuram - 29

Thiruppavai Pasuram - 30

Agaththiyar Aruliya Murugan Mantra in Tamil | அகத்தியர் அருளிய முருகன் மந்திரம் தமிழில்

 


Agaththiyar aruliya murugan mantra



Thiruppavai Pasuram - 27

Thiruppavai Pasuram - 28

Thiruppavai Pasuram - 29

Pamban Swamigal Aruliya Shanmugan Kavasam | பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்

 

அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்

தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி

எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன

திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க…(1)


ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க

தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க

சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க

நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க…(2)


இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை

முருகவேள் காக்க, நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க

துரிசஅறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க

திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க…(3)



Pamban Swamigal Aruliya Shanmugan Kavasam


ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க

தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க

ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன்

ஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க…(4)




உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க

தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க

புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும்

பிறங்கு மால்மருகன்காக்க, பின்முதுகைச் சேய் காக்க…(5)


ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்த்தியோன் காக்க, வம்புத்

தோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய

நாணினை அங்கி கெளரிநந்தனன் காக்க, பீஜ

ஆணியை கந்தன்காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க…(6)


எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க

அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க

விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க

செஞ்சரண நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க…(7)


ஏரகத் தேவன்என்தாள் இரு முழங்காலும் காக்க

சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க

நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க

சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க…(8)


ஐயுறு மலையன்பாதத்து அமர் பத்து விரலும் காக்க

பையுறு பழநி நாத பரன், அகம் காலைக் காக்க

மெய்யுடன் முழுதும், ஆதி விமல சண்முகவன் காக்க

தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க…(9)



ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம்

பலிகொள் இராக்கதப்பேய் பலகணத்து எவை ஆனாலும்

கிலிகொள எனைவேல் காக்க, கெடுபரர் செய்யும் சூன்யம்

வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க…(10)


ஓங்கிய சீற்றமே கொண்டு உவணிவில் வேல் சூலங்கள்

தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி

பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்,

தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க…(11)


ஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்

தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத்

தவ்வியே வருவா ராயின், சராசரம் எலாம் புரக்கும்

கவ்வுடைச் சூர சண்டன் கைஅயில் காக்க காக்க…(12)


கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை

கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு

நடையுடை எதனா லேனும் நான் இடர்ப் பட்டி டாமல்

சடுதியில் வடிவேல் காக்க சானவிமுளை வேல் காக்க…(13)


ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்

சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி

நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி

உகமிசை இவையால், எற் குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க…(14)


சலத்தில் உய்வன்மீன் ஐறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்

நிலத்திலும் சலத்திலும் தான் நெடுந்துயர் தரற்கே உள்ள

குலத்தினால், நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை

பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க…(15)


ஞமலியம் பரியன்கைவேல், நவக்கிரகக்கோள் காக்க

சுமவிழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம்,

திமிர்கழல் வாதம், சோகை, சிரமடி கர்ண ரோகம்

எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க…(16)


டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி, கண்ட மாலை

குமுறு விப்புருதி, குன்மம், குடல்வலி, ஈழை காசம்,

நிமிரொணா(து) இருத்தும்வெட்டை, நீர்பிரமேகம் எல்லாம்

எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க…(17)


இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்

முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை, தீமந்தம்

சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்த

பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும்சக்தி வடிவேல் காக்க…(18)


தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய்

சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல்,

அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை

எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க…(19)



நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்

அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்

இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப்பகந்த ராதி

இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க…(20)


பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்

கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி

எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை

ஒல்லையில் தார காரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க…(21)


மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும்

தண்ணிறை ஜலத்தின் மீதும்சாரி செய் ஊர்தி மீதும்

விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை

நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க…(22)


யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க

அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்பின் காக்க

சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க

சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க…(23)


ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்

செஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி

விஞ்சிடு திசையில் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில்

எஞ்சிடாக் கதிர்கா மத்தோன் இகலுடைக் கரவேல் காக்க…(24)


லகரமே போல் காளிங்கன்நல்லுடல் நெளிய நின்று

தகர மர்த்தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்,

நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க, மேற்கில்

இகல் அயில்காக்க, வாயுவினில் குகன் கதிர்வேல் காக்க…(25)


வடதிசை தன்னில் ஈசன்மகன்அருள் திருவேல் காக்க

விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க

நடக்கையில் இருக்கும்ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில், கீழ்க்

கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க…(26)


இழந்துபோகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்,

வழங்கும் நல் ஊண் உண்போதும் மால்விளையாட்டின் போதும்

பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்

செழும்குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க…(27)


இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்

வளர் அறுமுகச் சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க

ஒளிஎழு காலை, முன்எல் ஓம் சிவ சாமி காக்க

தெளிநடு பிற்பகல் கால், சிவகுரு நாதன் காக்க…(28)




இறகுடைக்கோழித் தோகைக்கு இறைமுன் இராவில் காக்க

திறலுடைச் சூர்ப்பகைத்தே, திகழ்பின் இராவில் காக்க

நறவுசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னில் காக்க

மறைதொழு குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க…(29)


இனம்எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க

தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க

நனி அநுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்

கனிவோடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்கவந்தே…(30)



Thiruppavai Pasuram - 27

Thiruppavai Pasuram - 28

Thiruppavai Pasuram - 29

Kanthar Anupoothi Murugan Mantra in Tamil | கந்தர் அனுபூதி முருகன் மந்திரம் தமிழில்

 


Kandhar Anupoothi Murugan song



Thiruppavai Pasuram - 25

Thiruppavai Pasuram - 27

Thiruppavai Pasuram - 29

Murugan 21 Potri in Tamil | முருகன் 21 போற்றி தமிழில்

 


Murugan Potri in Tamil



Thiruppavai Pasuram - 28

Thiruppavai Pasuram - 29

Thiruppavai Pasuram - 30

Murugan Gayatri Mantra | முருகன் காயத்ரி மந்திரம்

 


Murugan Gayatri Mantra



Thiruppavai Pasuram - 26

Thiruppavai Pasuram - 19

Thiruppavai Pasuram - 28

ஞாயிறு, 24 மே, 2026

Thiruppavai Pasuram - 16 | திருப்பாவை பாசுரம் - 16

 


Thiruppavai Pasuram - 16




Thiruppavai Pasuram - 11

Thiruppavai Pasuram - 8

Thiruppavai Pasuram - 10


Thiruppavai Pasuram - 12 | திருப்பாவை பாசுரம் - 12

 


Thiruppavai Pasuram - 12



Thiruppavai Pasuram - 9

Thiruppavai Pasuram - 8

Thiruppavai Pasuram - 6

Om Krishnaya Namaha Mantra Chanting Video | ஓம் கிருஷ்ணாய நமஹ மந்திரம் ஜபம்

 


Om Krishnaya Namaha Mantra Chanting Video


Hanuman Chalisa lyrics in Tamil

Ashtalakshmi Stotram Mahalakshmi Mantra in Tamil

Vinayagar Agaval lyrics in Tamil

சனி, 23 மே, 2026

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி பாடல் வரிகள் | Agara Muthala song lyrics in Tamil

 

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி

இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே

ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே




அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி

ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி



இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்

இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்

ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்

ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்

உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்

உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்

ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய்

அம்மா பேச வைத்தாய் 

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி



எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்

எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்

ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்

ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்

ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்

ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்

ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்

ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்

ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி


போற்ற வைத்து புகழ் சாற்ற வைத்து

அறிவூற்றினோடு உயராற்றல் தந்தென்னை


அறிஞன் கவிஞன் கலைஞன் இவனென

அருளும் தமிழும் திகழும் கடலென


கற்றவரும் கொற்றவரும் முற்றுமே

அறிந்தவரும் நித்தம் நித்தம் புகழ்ந்திட

நின்னருளை தந்தருள்வாய்


உற்றார் சுற்றம் உறவினர் மாந்தர்

யானை சேனை படையுடன் வேந்தரு


பற்றும் பற்றை நீக்கிய ஞானி

பலரும் புகழ்ந்திட ஆக்கிய வாணி


தாயில்லாத பிள்ளையென்று

வாயில்லாத ஊமையென்று

ஆயிரங்களான கல்வி

வாய் திறந்து தந்த செல்வி


அன்னை உன்னை சரணமடைந்தேன்

தேவி


Vinayagar 108 Potri in Tamil

Vinayagar Agaval lyrics in Tamil


Om Nama Shivaya Mantra Chanting | ஓம் நமசிவாய மந்திரம் ஜபம்




Vinayagar Agaval lyrics in Tamil

Ayyappan Bhakthi Paadalgal

Vinayagar Mantra for Success


Ganapati Mantra in Tamil | கணபதி மந்திரம் தமிழில்

 


Ganapati Mantra in Tamil


Vinayagar 108 Potri in Tamil

Vinayagar Agaval lyrics in Tamil

Sri Lakshmi Ashtrothram Lyrics in Tamil

Ganesh Mantra for New Beginnings | கணபதி மந்திரம்

 


Ganesh Mantra for New Beginnings


Vinayagar 108 Potri Lyrics in Tamil

Hanuman Chalisa lyrics in Tamil

Mahalakshmi 108 Potri in Tamil

Vinayagar Mantra - அல்லல் போம் வல்வினை போம் விநாயகர் மந்திரம்

 


Vinayagar Mantra


Vinayagar Agaval lyrics in Tamil

Hanuman Chalisa lyrics in Tamil

Mahalakshmi Gayatri Mantra

Vinayagar 108 Potri in Tamil | விநாயகரின் 108 போற்றி தமிழில்

 

ஓம் விநாயகனே போற்றி

ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி

ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி

ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி

ஓம் அமிர்த கணேசா போற்றி


ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி

ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி

ஓம் ஆனை முகத்தோனே போற்றி

ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி

ஓம் ஆதி மூலமே போற்றி ஓம் ஆனந்த உருவே போற்றி



Vinayagar 108 Potri in Tamil


ஓம் ஆபத் சகாயா போற்றி

ஓம் இமவான் சந்ததியே போற்றி

ஓம் இடரைக் களைவோனே போற்றி

ஓம் ஈசன் மகனே போற்றி

ஓம் ஈகை உருவே போற்றி

ஓம் உண்மை வடிவே போற்றி

ஓம் உலக நாயகனே போற்றி

ஓம் ஊறும் களிப்பே போற்றி

ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி

ஓம் எளியவனே போற்றி


ஓம் எந்தையே போற்றி

ஓம் எங்குமிருப்பவனே போற்றி

ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி

ஓம் ஏழை பங்காளனே போற்றி

ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி

ஓம் ஐயனே போற்றி ஓம் ஐங்கரனே போற்றி

ஓம் ஒப்பிலாதவனே போற்றி

ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி

ஓம் ஒளிமய உருவே போற்றி

ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி


ஓம் கருணாகரனே போற்றி

ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி

ஓம் கணேசனே போற்றி

ஓம் கணநாயகனே போற்றி

ஓம் கண்ணிற்படுபவனே போற்றி

ஓம் கலியுக நாதனே போற்றி

ஓம் கற்பகத்தருவே போற்றி

ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி

ஓம் கிருபாநிதியே போற்றி

ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி


ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி

ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி

ஓம் குணநிதியே போற்றி

ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி

ஓம் கூவிட வருவோய் போற்றி

ஓம் கூத்தன் மகனே போற்றி

ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி

ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி

ஓம் கோனே போற்றி

ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி


ஓம் சடுதியில் வருபவனே போற்றி

ஓம் சங்கரன் புதல்வனே போற்றி

ஓம் சங்கடஹரனே போற்றி

ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி

ஓம் சிறிய கண்ணோனே போற்றி

ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி

ஓம் சுருதிப் பொருளே போற்றி

ஓம் சுந்தரவடிவே போற்றி

ஓம் ஞாலம் காப்பவனே போற்றி

ஓம் ஞான முதல்வனே போற்றி


ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி

ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி

ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி

ஓம் துயர் துடைப்பவனே போற்றி

ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி

ஓம் தேவாதி தேவனே போற்றி

ஓம் தொந்தி விநாயகனே போற்றி

ஓம் தொழுவோ நாயகனே போற்றி

ஓம் தோணியே போற்றி

ஓம் தோன்றலே போற்றி


ஓம் நம்பியே போற்றி

ஓம் நாதனே போற்றி

ஓம் நீறணிந்தவனே போற்றி

ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி

ஓம் பழத்தை வென்றவனே போற்றி

ஓம் பாரதம் எழுதியவனே போற்றி

ஓம் பரம்பொருளே போற்றி

ஓம் பரிபூரணனே போற்றி

ஓம் பிரணவமே போற்றி

ஓம் பிரம்மசாரியே போற்றி


ஓம் பிள்ளையாரே போற்றி

ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி

ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி

ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி

ஓம் புதுமை வடிவே போற்றி

ஓம் புண்ணியனே போற்றி

ஓம் பெரியவனே போற்றி

ஓம் பெரிய உடலோனே போற்றி

ஓம் பேரருளாளனே போற்றி

ஓம் பேதம் அறுப்போனே போற்றி


ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி

ஓம் மகிமையளிப்பவனே போற்றி

ஓம் மகாகணபதியே போற்றி

ஓம் மகேசுவரனே போற்றி

ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி

ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி

ஓம் முறக்காதோனே போற்றி

ஓம் முழுமுதற்கடவுளே போற்றி

ஓம் முக்கணன் மகனே போற்றி

ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி



ஓம் மூத்தோனே போற்றி

ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி

ஓம் வல்லப கணபதியே போற்றி

ஓம் வரம்தரு நாயகனே போற்றி

ஓம் விக்னேஸ்வரனே போற்றி

ஓம் வியாஸன் சேவகனே போற்றி

ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி

ஓம் வெற்றியளிப்பவனே போற்றி


Vinayagar Agaval lyrics in Tamil

Hanuman Chalisa lyrics in Tamil

Ashtalakshmi Stotram Mahalakshmi Mantra in Tamil


Very Powerful Ganapati Mantra | மிகவும் சக்தி வாய்ந்த கணபதி மந்திரம்

 


Ganapati Mantra


Vinayagar Agaval lyrics in Tamil

Mahalakshmi Gayatri Mantra

Lakshmi Kubera Mantra

Vinayagar Agaval lyrics in Tamil | விநாயகர் அகவல் பாடல் வரிகள்


சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாடப்

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)



Vinayagar Agaval Video Song


வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)



இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15) 



இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)


குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)


தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)


தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)


பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)


குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)



குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)


புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)


முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)

இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)


எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)


கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)


தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)


ஓம் விக்ன விநாயகா போற்றி…


Kandha Sasti Kavasam Lyrics in Tamil

Varuvandi Tharuvandi Murugan song lyrics in Tamil

Solla Solla Inikuthada Murugan song lyrics in Tamil



Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்

பண்ணிநேர் மொழியாள் உமை பங்கரோ.....ஓ ஓ மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ... கண்ணினால் உமைக் காண கதவினை... திண்ணமாக திறந்தருள் செய்மினேன்... பிர...