முரண்டு பிடிக்காத
முண்டகக்கண்ணி அம்மா
மொறைச்சு பாக்காத
பாளையத்து அம்மா யம்மா
கண்ண கண்ண உருட்டாத
கருமாரி அம்மா
கத்திய நீ காட்டாத
காளிதேவி அம்மா
அவ ஆக்கி வச்ச சோத்த
நீ மூக்கு முட்ட புடிச்ச
அவ ஊத்தி வச்ச கூழை
உன் நாக்கு ருசிக்க குடிச்ச
அடி சங்கரியே பைரவியே
பட்டுனு வரத்தான் எக்குறியே
பாரேன்டி பாரேன்
அவ தவிப்பத
மனம் மாற கொஞ்சம் மாற
நீ கொதிப்பத
முரண்டு பிடிக்காத
முண்டகக்கண்ணி அம்மா
மொறைச்சு பாக்காத
பாளையத்து அம்மா யம்மா
கண்ண கண்ண உருட்டாத
கருமாரி அம்மா
கத்திய நீ காட்டாத
காளிதேவி அம்மா
வேப்பில்லைய இடுப்புல சுத்தி
எங்க இடுப்ப சுத்தி
வேண்டி வேண்டி கோவிலை சுத்தி
உன் கோவில சுத்தி
கன்னத்துல அழகுவேல் குத்தி
யம்மா அழகு குத்தி
பால் குடங்கள் எடுத்த
அந்த பாலகி முகத்தை
பாரேன் பாரேன் யம்மாடி
முட்டை பாலும் உனக்கு தந்தா
சுட்ட மீனும் படையல் வச்சா
கட்டு கழுத்து தாளிய நீ
காவு கேட்டு நிக்குறியே
யம்மா பத்தினிங்க விரதத்துக்கு
சக்தி ஒன்னு இருக்குதுனா
பெத்தவளே மனம் இறங்கு
பாசத்துக்குள் நீ அடங்கு
அம்மா கடல் நீயே கொதிச்சிபுட்டா
சூடாத்த நீரேது காளி நீ
மீனாட்சியா மாறம்மா
அம்மா கற்பூர தீபமேந்தி
கைவிளக்கு போட்ட அந்த
கற்பரசி வாழ்வை எண்ணி பாரம்மா
அடி பெண்ணினம்தான்
அது என்றும் உன்னினம்தான்
வேண்டுவதும் உன்னிடம்தான்
அடி சத்தியம் பண்ணு சத்தியம் பண்ணு
பக்தரை காக்க என்னிடம் வந்து
சத்தியம் பண்ணு யம்மா
முரண்டு பிடிக்காத
முண்டகக்கண்ணி அம்மா
மொறைச்சு பாக்காத
பாளையத்து அம்மா யம்மா
கண்ண கண்ண உருட்டாத
கருமாரி அம்மா
கத்திய நீ காட்டாத
காளிதேவி அம்மா
கொம்பு மஞ்சள் அரைச்சு எடுத்து
அம்மா அரைச்சு எடுத்து
பூசி பூசி குளிக்கவும் வச்சு
உன்ன குளிக்க வச்சு
உச்சி மல்லி மாலையும் கட்டி
உன் கழுத்தில் போட்டு
கும்பிட்டவ வாழ்வை காக்க
வாடி வாடி வாடி வாடி வாடியம்மா
பூப்பதையும் காய்ப்பதையும்
காப்பவளே அம்மா நீ
காப்பவளே கொலை செஞ்சா
கடவுளும் பொய்யாகி அம்மா
குங்குமத்தை கொடுத்த கையால்
மங்கலத்தை பறிக்கலாமா
கொலைவிழி அம்மா நீ
கோரபலி கேக்கலாமா
அம்மா புருஷன் வரம் கேட்டு இங்கே
ஒரு காலில் தவம் இருந்த
மாங்காட்டு காமாட்சி வாடியம்மா
அம்மா குடிசை முதல் மாடி வரை
குடும்பத்து பெண்களுக்கு
தாலியில்லா வாழ்க்கை
இங்கே கேளியம்மா
அடி வந்துவிடு கோபம் விட்டு வந்துவிடு
பூவும் பொட்டும் தந்துவிடு
அடி வந்திடு வந்திடு நம்பிடும் பக்தரை
காத்திட்ட இங்கே வந்திடம்மா வந்திடம்மா
முரண்டு பிடிக்காத
முண்டகக்கண்ணி அம்மா
மொறைச்சு பாக்காத
பாளையத்து அம்மா யம்மா
கண்ண கண்ண உருட்டாத
கருமாரி அம்மா
கத்திய நீ காட்டாத
காளிதேவி அம்மா
அவ ஆக்கி வச்ச சோத்த
நீ மூக்கு முட்ட புடிச்ச
அவ ஊத்தி வச்ச கூழை
உன் நாக்கு ருசிக்க குடிச்ச
அடி சங்கரியே பைரவியே
பட்டுனு வரத்தான் எக்குறியே
பாரேன்டி பாரேன்
அவ தவிப்பத
மனம் மாற கொஞ்சம் மாற
நீ கொதிப்பத
Thaaye Thirisooli Amman devotional song lyrics in Tamil
Maruvaththoor Om Sakthi Amman devotional song lyrics in Tamil
Om Shivoham Sivan devotional song lyrics in Tamil