sivan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sivan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 ஆகஸ்ட், 2026

Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்


பண்ணிநேர் மொழியாள்

உமை பங்கரோ.....ஓ ஓ

மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ...

கண்ணினால் உமைக் காண கதவினை...

திண்ணமாக திறந்தருள் செய்மினேன்...



பிரதோஷ சிவன் பக்தி பாடல்


ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ......ஆ......ஆஅ....ஆ...ஆ....ஆ...

ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ......


தாழ் திறவாய்...

மணிக் கதவே தாழ் திறவாய்

ஆலய மணிக் கதவே தாழ் திறவாய்

மறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்

மறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்

ஆலய மணிக் கதவே தாழ் திறவாய்


ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ......ஆ......ஆஅ....ஆ...ஆ....ஆ...

ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ......ஆ......



மனக் கதவும் திறந்த பரம் பொருளே

திருக் கதவும் திறக்க வரம் அருளே

மனக் கதவும் திறந்த பரம் பொருளே

திருக் கதவும் திறக்க வரம் அருளே


ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....


இரு கரம் கூப்பி உன்னை வலம் வரவே


ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆஅ......


இரு கரம் கூப்பி உன்னை வலம் வரவே

எங்கும் சிவமயமாய் மலர தாழ் திறவாய்

இரு கரம் கூப்பி உன்னை வலம் வரவே

எங்கும் சிவமயமாய் மலர தாழ் திறவாய்


ஆலய மணிக் கதவே தாழ் திறவாய்


ஆடும் திருவடி கோலம் அறிந்திட

அரனே தாழ் திறவாய்

அன்னையின் மார்பினில் பொன்மணி கண்டிட

சிவனே தாழ் திறவாய்

அருள் நெறி தெளிவுற திருமறை புகழ் பெற

அன்பே தாழ் திறவாய்

ஒரு முறை இரு முறை பல முறை கேட்டேன்

ஒலியே தாழ் திறவாய்

இறைவா தாழ் திறவாய்

என் தலைவா தாழ் திறவாய்

கதவே தாழ் திறவாய் தாழ் திறவாய்......


திருச்சிற்றம்பலம்........திருச்சிற்றம்பலம்


சிவமயமே எங்கும் சிவமயமே

இனி பவபயம் இல்லை என்றும் சிவமயமே


சிவமயமே எங்கும் சிவமயமே

இனி பவபயம் இல்லை என்றும் சிவமயமே


சிவமயமே எங்கும் சிவமயமே

இனி பவபயம் இல்லை என்றும் சிவமயமே


சிவமயமே எங்கும் சிவமயமே

சிவமயமே எங்கும் சிவமயமே

சிவமயமே எங்கும் சிவமயமே


Shiva Tandava Stotram Lyrics in Tamil

Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil

Malai nindra thirukkumara song lyrics in Tamil

Parthene Uyirin Vazhiyae song lyrics in Tamil

Kanakadhara Stotram Lyrics in Tamil



சனி, 25 ஜூலை, 2026

Shiva Tandava Stotram Lyrics in Tamil | சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடல் வரிகள் தமிழில்


ஜடா டவீ கலஜ் ஜல ப்ரவாஹ பாவித ஸ்தலே

கலே வலம்ப்ய லம்பிதாம் புஜங்க துங்க மாலிகாம்

டமட் டமட் டமட் டமன் னிநா தவட் டமர் வயம்

சகார சண்ட தாண்டவம் தனோது னஃ சிவஃ சிவம்




ஜடா கடாஹ சம்பிரம பிரமணிலிம்பனிர்ஜரி

விலோலவிச்சிவல்லரி விராஜமானமுர்தனி

தகதகதக ஜ்வலல்லாட பட்டபாவகே

கிஷோரா சந்திரசேகரே ரதிஹ் பிரதிஷணம் மமா


தரா தரேந்த்ர நந்தினீ விலாஸ பந்து பந்துர

ஸ்புரத் திகந்த ஸந்ததி ப்ரமோத மான மானஸே

க்ருபா கடாக்ஷ தோரணீ நிருத்த துர்த ராபதி

க்வசித் தீகம்பரே மனோ வினோதமேது வஸ்துனி


ஜடா பூஜங்க பிங்களஸ் புரத்ஃபனமணிபிரபா

கடம்பகுங்கும திரவப்பிரலிப்த திக்வதுமுகே

மதாந்த சிந்து ரஸ்புரத் வகுட்டரியமேதுரே

மனோ வினோதமத்புதம் பிபர்த்து பூதபர்த்தரி


ஸஹஸ்ர லோச்சன ப்ரப்ருத் யசேஷ லேக சேகர

ப்ரஸூன தூளி தோரணீ விதூ ஸராந்த்ரீ பீடபூஃ

புஜங்க ராஜ மாலயா னிபத்த ஜாட ஜூடக

ஸ்ரியை சிராய ஜாயதாம் சகோரபந்து சேகர


லலாதசத்வர ஜ்வலதனஞ்ஜய ஸ்ஃபுலிங்கபா

நிபீடபஞ்சசாயகம் நமன்ன்லிம்பநாயகம்

சுதா மயூக லேகயா விராஜமாணஷேகரம்

மகா கபாலி சம்பதே ஷிரோஜடாலமாஸ்துனஹ


கராள பால பட்டிகா தகத் தகத் தகஜ் ஜ்வல

தனஞ்ஜயாம் ஹுதீ க்ருத ப்ரசண்ட பஞ்ச ஸாயகே

தரா தரேந்த்ர நந்தினீ குசாக்ர சித்ர பத்ரக

ப்ரகல்பனைக ஸில்பினி த்ரிலோச்சனே ரதிர் மம 


நவீன மேக மண்டலி நிருத்ததுர்தரஸ்புரத்

குஹு நிஷிதினிதமா பிரபந்தபத்தகந்தரஹ

நிலிம்பனிர்ஜரி தரஸ்தனோது க்ரிதி சிந்துரஹ

கலானிதானபந்துராஹ் ஷ்ரியம் ஜகதுரந்தரஹ


ப்ரபுல்ல நீல பங்கஜ ப்ரபஞ்ச காலிம ப்ரபா

வலம்பி கண்ட கண்டலீ ருசிப் ரபத்த கந்தரம்

ஸ்மர்ச்சிதம் புரஸ்ச்சிதம் பவஸ்ச்சிதம் மகச்சிதம்

கஜச்சி தாந்தக ச்சிதம் தமந்தக ச்சிதம் பஜே


அகர்வகர்வ சர்வமங்களா கலாகதம்பமஞ்சரி

ரசப்பிரவாஹ மாதுரி விஜ்ரும்பனா மதுவ்ரதம்

ஸ்மராந்தகம் புறாந்தகம் பவாந்தகம் மகாந்தகம்

கஜாந்தகாந்த காண்டகம் தமந்தகாண்டகம் பஜே


ஜயத்வதபிரவிப்பிரம பிரமத்புஜங்கமாசஃபூர்

திக்திக்தி நிர்கமத்கரால பால் ஹவ்யவாத்

திமித்திமித்திமித்வ நன்ம்ருதங்கதுங்கமங்கள

த்வனிக்ரமப்பிரவர்த்திதா பிரச்சண்ட தாண்டவ சிவா


த்ருஷத்விசித்ர தல்பயோர் புஜங்க மௌக்தி கஸ்ரஜோர்

கரிஷ்தரத்ன லோஷ்டயோ சுஹ்ருத்வி பக்ஷபக்ஷயோஹ்

த்ருஷ்ணரவிந்த சக்ஷுஷோ பிரஜாமஹி மஹேந்திரயோஹ்

சம பிரவர்தயன்மனா கடா சதாஷிவம் பஜே


கடா நிலிம்பனிர்ஜரி நிகுஞ்சஜகோட்டரே வசன்ஹ்

விமுக்ததுர்மதி சதா ஷிரா ஸ்தமஜ்ஜலிம் வஹான்ஹ்

விமுக்தலோலச்சனோ லலாமபாலலக்னகா

ஷிவேதி மந்திரமுச்சரன் சதா சுகி பவாம்யஹம்


இமாம் ஹி நித்யமேவா முக்தமுட்டமோட்டமம் ஸ்தவம்

பதன்ஸ்மரன் புருவண்ணரோ விஷுத்திமேதி சந்ததம்

ஹரே குரவ் சுபக்திமாஷு யதி நன்யத கதிம்

விமோஹனம் ஹி தேஹினம் சுஷங்கரஸ்ய சிந்தனம்


Vishnu Sahasranamam Lyrics in Tamil

Kanakadhara Stotram Lyrics in Tamil

Malai nindra thirukkumara song lyrics in Tamil

Vanna Mayil Erum Murugan Song Lyrics in Tamil

Isaiyai Thamizhai Song Lyrics in Tamil



வியாழன், 16 ஜூலை, 2026

இசையாய் தமிழாய் இருப்பவனே பாடல் வரிகள் தமிழில் | Isaiyai Thamizhai Song Lyrics in Tamil

 

இசையாய் தமிழாய் இருப்பவனே..

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..


இகபரசுகமருள் பரமகருணை வடிவே..

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..

இகபரசுகமருள் பரமகருணை வடிவே..

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..




பொன்னெழில் மேனியில் பூசிய வெண்ணீறும்

பூந்தளிர் மலர் மாலையும்..

பொலிவுடன் ஒளிவிடும் இளமதி

பொன்னெழில் மேனியில் பூசிய வெண்ணீறும்

பூந்தளிர் மலர் மாலையும்..

பொலிவுடன் ஒளிவிடும் இளமதி

வாய்ந்த செஞ்சடைக் கோலமும்..


வானவர்..

ஞானியர்..

வாழ்த்திடும்..

வடிவினையுடையாய்..

அருட்பெரும் சுடராய்..

அடியவர் மனதினிலே..


இசையாய் தமிழாய் இருப்பவனே..

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..

இகபரசுகமருள் பரமகருணை வடிவே

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..


நந்திதேவனொடு இந்திராதியர்

வந்து தாழ்நினைவணங்கிடவே..

நந்திதேவனொடு இந்திராதியர்

வந்து தாழ்நினைவணங்கிடவே..


தந்திமாமுகனும் விந்தைவேல்முகனும்

சந்தமார் தமிழ் முழங்கிடவே..

தந்திமாமுகனும் விந்தைவேல்முகனும்

சந்தமார் தமிழ் முழங்கிடவே..


எந்தவேளையும் மறதிடாது

மறைசிந்து நான்முகன் பணிந்திடவே..

சந்தமார்குழலி இந்துநேர்வதனி

மங்களாம்பிகை மகிழ்ந்திடவே..


தவினுறு முகமதில் இளநகையே

கனிவுறு விழிகளில் அருள் மழையே..

சுவைபட வருவதும் எழுசுரமே

துணையென மொழிவதும் உயர்தமிழே..


மந்திரமாய்..

மாதவமாய்..

தந்திரமாய்..

தாரகமாய்..

வழிபடும் அடியவர் இருவினை பொடிபட

மழுமதி தனைவிடும் இனிய அபயகரமும்

வாய்ந்த செஞ்சடைக் கோலமும்..


வானவர்..

ஞானியர்..

வாழ்த்திடும்..

வடிவினையுடையாய்..

அருட்பெரும் சுடராய்..

அடியவர் மனதினிலே...


இசையாய் தமிழாய் இருப்பவனே

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே

இகபரசுகமருள் பரமகருணை வடிவே

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..


Vishnu Sahasranamam Lyrics in Tamil

Sivan 108 Potri in Tamil

புதன், 27 மே, 2026

Ondranavan Uruvil Irandanavan Sivan Song Lyrics in Tamil | ஒன்றானவன் உருவில் சிவன் பக்தி பாடல் வரிகள் தமிழில்



ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில்
மூன்றானவன் ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில்
மூன்றானவன் நன்றான
வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாய என ஐந்தானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாய என ஐந்தானவன்




இன்பச் சுவைகளுக்குள்
ஆறானவன் ஆஆ ஆஆ ஆஆ
இன்பச் சுவைகளுக்குள்
ஆறானவன் இன்னிசை
ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில்
எட்டானவன் சித்திக்கும்
பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்


பத்தானவன்
நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனைப்
பெற்றானவன் முற்றாதவன்
மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும்
நடுவானவன் முன்னைக்கும்
பின்னைக்கும் நடுவானவன்


ஆணாகிப் பெண்ணாகி
நின்றானவன் அவையொன்று
தானென்று சொன்னானவன்
ஆணாகிப் பெண்ணாகி
நின்றானவன் அவையொன்று
தானென்று சொன்னானவன்
தான்பாதி உமைபாதி
கொண்டானவன் சரிபாதி
பெண்மைக்குத் தந்தானவன்


காற்றானவன்
குளிரானவன் நீரானவன்
நெருப்பானவன் நேற்றாகி
இன்றாகி என்றைக்கும்
நிலையாகி ஊற்றாகி
நின்றானவன் அன்பின்
ஒளியாகி நின்றானவன்




Pitha Pirai Soodi Sivan devotional song lyrics in Tamil | பித்தா பிரைசூடி பெருமாளே சிவன் பக்தி பாடல் வரிகள் தமிழில்

 

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா

எத்தால் மறவாதே நினைக்கிறேன்

மனத்து உன்னை

வைத்தாய் பெண்ணை தென்பால்

வெண்ணைநல்லூர் அருள்துறையுள்

அத்தா… உனக்கு ஆளாய்

இனி அல்லென் எனலானேன்

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே



Pitha Pirai Soodi Sivan song


இறைவா

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை

அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை

அந்த அம்மை இல்லாமல்

இந்த பிள்ளை இல்லை

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே


பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக

அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக

பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக

அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக

சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெறுக

சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெறுக

எந்தன் சந்ததியே உந்தனுக்கு

அடிபணிய இறைவா

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே


கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே

கோவில் கதவை திறந்தழைத்த திருவருளே

கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே

கோவில் கதவை திறந்தழைத்த திருவருளே

வெண்ணைநல்லூர் உறையும் அருட்கடலே

வெண்ணைநல்லூர் உறையும் அருட்கடலே

வந்து என்னை என்றும் ஆளுகின்ற

பரம்பொருளே இறைவா


சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

இறைவா


Thiruvembaavai

Sivan 108 Potri in Tamil

Kolaru Pathigam

Eagambaresane Eagalingane Om Namah Shivaya Sivan Song in Tamil | ஏகாம்பரேசனே சிவன் பாடல்

 


Eagambaresane Eagalingane Om Namah Shivaya Song




Ayyanaar Mantra

Sivan Thuthi in Tamil

Kolaru Pathigam

Odi Odi Odi Utkalantha Sivan Song Lyrics in Tamil | ஓடி ஓடி ஓடி உட்கலந்த பாடல் வரிகள்

 

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை

நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்

வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள்

கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய



என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின்

என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ

என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே



Odi Odi Odi Utkalantha Sivan Song


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா

கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே

ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம்

ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து

அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்

அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்

அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய




இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்

இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு

எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம்

உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல

மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல

பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல

அரியதாகி நின்றநேர்மை யாவர் காண வல்லரோ


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்

வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார்

நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்

என்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசரே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


ஆனவஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்

ஆனவஞ்செழுத்துளே ஆதியான மூவரும்

ஆனவஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்

ஆனவஞ்செழுத்துளே அடங்கலாவலுற்றதே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை

நினைப்புமாய் மறுப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை

அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்

எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய




பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை

பாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை

மிண்டராய்த் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை

மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ

கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ

இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ

செமபொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும்

நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம்

ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்

தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லையே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளே

நமச்சிவாய மஞ்சுதஞ்சும் புரணமான மாய்கையை

நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முளே இருக்கவே

நமச்சிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள்

இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ

இல்லையில்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை

எல்லை கண்டு கொண்டார் இனி பிறப்பதிங்கு இல்லையே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


காரகார காரகார காவல் ஊழி காவலன்

போரபோர போரபோர போரில் நின்ற புண்ணியன்

மாரமார மாரமார மரங்களும் எழும் எய்தசீ

ராமராம ராமராம ராமா நாமம் என்னும் நாமமே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


விண்ணிலுள்ள தேவர்கள் அறியோனா மெய்ப்பொருள்

கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான்

மண்ணெலாம் பிறப்பறுத்த மலரடிகள் வைத்தபின்

அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்

உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்

மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்

சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே




ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்

தன்மையான மந்திரம் சமைந்த ரூபமாகிய

வெண்மையான மந்திரம் வினைந்து நீரதானதே

உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய


ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்

ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்

ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்

ஓம் நமச்சிவாயமே உட்கலந்து நிற்குமே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய



 Brahma Gayatri Mantra

Ayyanaar Mantra

Kolaru Pathigam

Sivan 108 Potri in Tamil | சிவன் 108 போற்றி தமிழில்

 

ஓம் அப்பா போற்றி!

ஓம் அரனே போற்றி!

ஓம் அரசே போற்றி!

ஓம் அமுதே போற்றி!

ஓம் அழகே போற்றி!

ஓம் அத்தா போற்றி!

ஓம் அற்புதா போற்றி!

ஓம் அறிவா போற்றி!



Sivan 108 Potri in Tamil


ஓம் அம்பலா போற்றி!

ஓம் அரியோய் போற்றி!

ஓம் அருந்தவா போற்றி!

ஓம் அனுவே போற்றி!

ஓம் அன்பா போற்றி!

ஓம் ஆதியே போற்றி!

ஓம் ஆத்மா போற்றி!

ஓம் ஆரமுதே போற்றி!



ஓம் ஆரணனே போற்றி!

ஓம் ஆண்டவா போற்றி!

ஓம் ஆலவாயா போற்றி!

ஓம் ஆரூரா போற்றி!

ஓம் இறைவா போற்றி!

ஓம் இடபா போற்றி!

ஓம் இன்பா போற்றி!

ஓம் ஈசா போற்றி!

ஓம் உடையாய் போற்றி!



ஓம் உணர்வே போற்றி!

ஓம் உயிரே போற்றி!

ஓம் ஊழியே போற்றி!

ஓம் எண்ணே போற்றி!

ஓம் எழுத்தே போற்றி!

ஓம் எண் குணா போற்றி!

ஓம் எழிலா போற்றி!



ஓம் எளியா போற்றி!

ஓம் ஏகா போற்றி!

ஓம் ஏழிசையே போற்றி!

ஓம் ஏறுர்ந்தாய் போற்றி!

ஓம் ஐயா போற்றி!

ஓம் ஒருவா போற்றி!

ஓம் ஒப்பிலானே போற்றி!

ஓம் ஒளியே போற்றி!

ஓம் ஓங்காரா போற்றி!

ஓம் கடம்பா போற்றி!



ஓம் கதிரே போற்றி!

ஓம் கதியே போற்றி!

ஓம் கனியே போற்றி!

ஓம் கலையே போற்றி!

ஓம் காருண்யா போற்றி!

ஓம் குறியே போற்றி!



ஓம் குணமே போற்றி!

ஓம் கூத்தா போற்றி!

ஓம் கூன்பிறையாய் போற்றி!

ஓம் சங்கரா போற்றி!

ஓம் சதுரா போற்றி!

ஓம் சதாசிவா போற்றி!

ஓம் சிவையே போற்றி!

ஓம் சிவமே போற்றி!

ஓம் சித்தமே போற்றி!

ஓம் சீரா போற்றி!



ஓம் சுடரே போற்றி!

ஓம் சுந்தரா போற்றி!

ஓம் செல்வா போற்றி!

ஓம் செங்கணா போற்றி!

ஓம் சொல்லே போற்றி!

ஓம் ஞாயிறே போற்றி!



ஓம் ஞானமே போற்றி!

ஓம் தமிழே போற்றி!

ஓம் தத்துவா போற்றி!

ஓம் தலைவா போற்றி!

ஓம் தந்தையே போற்றி!

ஓம் தாயே போற்றி!

ஓம் தாண்டவா போற்றி!

ஓம் திங்களே போற்றி!


ஓம் திசையே போற்றி!

ஓம் திரிசூலா போற்றி!

ஓம் துணையே போற்றி!

ஓம் தெளிவே போற்றி!

ஓம் தேவதேவா போற்றி!

ஓம் தோழா போற்றி!

ஓம் நமசிவாயா போற்றி!

ஓம் நண்பா போற்றி!


ஓம் நஞ்சுண்டாய் போற்றி!

ஓம் நான்மறையாய் போற்றி!

ஓம் நிறைவா போற்றி!

ஓம் நினைவே போற்றி!

ஓம் நீலகண்டா போற்றி!

ஓம் நெறியே போற்றி!

ஓம் பண்ணே போற்றி!

ஓம் பித்தா போற்றி!


ஓம் புனிதா போற்றி!

ஓம் புராணா போற்றி!

ஓம் பெரியோய் போற்றி!

ஓம் பொருளே போற்றி!

ஓம் பொங்கரவா போற்றி!

ஓம் மதிசூடியே போற்றி!

ஓம் மருந்தே போற்றி!

ஓம் மலையே போற்றி!

ஓம் மனமே போற்றி!



ஓம் மணாளா போற்றி!

ஓம் மணியே போற்றி!

ஓம் மெய்யே போற்றி!

ஓம் முகிலே போற்றி!

ஓம் முக்தா போற்றி!

ஓம் முதல்வா போற்றி!

ஓம் வானமே போற்றி!



ஓம் வாழ்வே போற்றி!

ஓம் வையமே போற்றி!

ஓம் வைப்பே போற்றி

ஓம் சிவபிரானே போற்றி ! போற்றி


தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி…


Ayyanaar Mantra

Sivapuranam

Kolaru Pathigam

செவ்வாய், 26 மே, 2026

Sivan Panchatcharam in Tamil | சிவன் பஞ்சாட்சரம் மந்திரம் தமிழில்

 


Sivan Panchatcharam



Sivapuranam

Kolaru Pathigam

Ayyanaar Mantra

Kolaru Pathigam lyrics in Tamil | கோளறு பதிகம் பாடல் வரிகள் தமிழில்

 


வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி

சனிபாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.





என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க

எருதேறி ஏழை உடனே

பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்

உடனாய நாள்கள் அவைதாம்

அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.



உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து

உமையோடும் வெள்ளை விடைமேல்

முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி

திசை தெய்வமான பலவும்

அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.



மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து

மறையோதும் எங்கள் பரமன்

நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்

கொடு நோய்களான பலவும்

அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே


நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்

விடையேறு நங்கள் பரமன்

துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்

மிகையான பூதம் அவையும்

அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே



வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்

மடவாள் தனோடு உடனாய்

நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

கோளரி உழுவையோடு கொலையானை கேழல்

கொடு நாகமோடு கரடி

ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே



செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக

விடையேறு செல்வன் அடைவார்

ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்

வினையான வந்து நலியா

அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே



வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து

மடவாள் தனோடும் உடனாய்

வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்

இடரான வந்து நலியா

ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே



பலபல வேடமாகும் பரனாரி பாகன்

பசுவேறும் எங்கள் பரமன்

சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்

வரு காலமான பலவும்

அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே



கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு

குணமாய வேட விகிர்தன்

மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்

திருநீறு செம்மை திடமே

அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே



தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி

வளர்செம்பொன் எங்கும் நிகழ

நான்முகன் ஆதியாய பிரமா புரத்து

மறைஞான ஞான முனிவன்

தானுறு கோளுநாளும் அடியாரை வந்து

நலியாத வண்ணம் உரைசெய்

ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்

அரசாள்வர் ஆணை நமதே!!


1008 Names of Shiva Lingam

Sivan Moola Mantra

Ayyanaar Mantra

Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்

பண்ணிநேர் மொழியாள் உமை பங்கரோ.....ஓ ஓ மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ... கண்ணினால் உமைக் காண கதவினை... திண்ணமாக திறந்தருள் செய்மினேன்... பிர...