விழிக்கு துணை திரு மென் மலர் பாதங்கள்
மெய்மை குன்றா மொழிக்கு துணை, முருகா எனும் நாமங்கள்
முன்பு செய்த பழிக்கு துணை, அவன் பன்னிரு தோளும்
பயந்த தனி வழிக்கு துணை, வடி வேலும் செங்கோடன் மயூரமும்
வண்ண மயில் ஏறும் என் தங்க வடிவேலோ
கந்தன் உன்னை காண தினம் ஓடி வருவேனோ
செந்தமிழை காக்கும் வேல், சேவல் கொடியானோ
எண்ணி எண்ணி பாடும் என்னை
கந்தன் அறிவானோ
தோளிலே பால் காவடி சுமந்து
ஓடினேன் மேடு பள்ளங்கள் கடந்து
அடினேன் அவன் ஆலயம் நுழைந்து
பாடினேன் வடிவேலனை நினைத்து
தந்தைக்கு உபதேசம் செய்து சுவாமிமலை ஆள்பவன் நீ
மாம்பழத்தில் கோபம் கொண்டு பழனி மலை ஆண்டவன் நீ
பொங்கும் கடல் ஓரமாக செந்தூரிலே வாழ்பவன் நீ
வள்ளி தெய்வயானையுடன் திருத்தணிகை நாயகன் நீ
தனக்கொரு தனித்துவ படையென நிலமென
வான்மயில் ஏறியவன் முருகன்
பாதங்கள் சொன்ன மகன்
யாரும் எனக்கில்லை என நாதியற்று நான் கலங்க
ஆறுதல் தந்த மகன் முருகன்
ஆறுதோள் வென்ற மகன்
வா, என்னைக் காக்கும் வடிவேலாயா
நீ இன்றி வேறு துணை யாரையா
வா, என்னைக் காக்கும் வடிவேலாயா
நீ இன்றி வேறு துணை யாரையா யாரையா
பொதிகையில் பிறந்து முருகன் வளர்ந்த கதையும்
பிரணவப் பொருள் மறந்ததில் வேல் சினந்தன்று கொடுத்த சிறையும்
வள்ளி தெய்வானையுடன் காட்சி அருளும்
தணிகையின் நாயகன் உன்னை காணயில் இன்னல் ஓடி மறையும்
வா, என்னைக் காக்கும் வடிவேலாயா
நீ இன்றி வேறு துணை யாரையா
Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil