Deivam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Deivam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 மே, 2026

Varuvandi Tharuvandi Murugan Devotional Song Lyrics in Tamil | வருவாண்டி தருவாண்டி முருகன் பக்தி பாடல் வரிகள் | Deivam Movie

 

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி அவன்

வரம் வேண்டு வருவோர்க்கு

அருள்வாண்டி ஆண்டி

வருவாண்டி தருவாண்டி

மலையாண்டி பழனி மலையாண்டி



Varuvandi Tharuvandi Murugan Video song


சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த

சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று

சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று

சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி

நவலோக மணியாக நின்றாண்டி

நவலோக மணியாக நின்றாண்டி என்றும்

நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும்

நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி


வருவாண்டி தருவாண்டி மலையாண்ட

பழனி மலையாண்டி


பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்

பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி

பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்

பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி

காலாற மலையேற வைப்பாண்டி

காலாற மலையேற வைப்பாண்டி

கந்தா என்றால் இங்கு வந்தேனென்று

கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி


வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

பழனி மலையாண்டி


சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்

செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்

செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்

செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி

பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி திருப்

புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி திருப்

புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி


வருவாண்டி தருவாண்டி

மலையாண்டி பழனி மலையாண்டி

பழனி மலையாண்டி பழனி மலையாண்டி…


Mannanalum Thiruchenduril Murugan song lyrics in Tamil

Enakkum Idam Undu Murugan song lyrics in Tamil

Idumban Kavasam Video Song

Saibaba Mantra 108 times

Guru Bhagavan Mantra in Tamil


செவ்வாய், 12 மே, 2026

Maruthamalai Maamaniyae Murugaiya song lyrics in Tamil | மருதமலை மாமணியே முருகையா பாடல் வரிகள் | Deivam Movie


கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?……

கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?…..

தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?…..

தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை

அஆஆ.. மருதமலை மருதமலை முருகா




மருதமலை மாமணியே முருகய்யா

மருதமலை மாமணியே முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா


மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்

ஐயா உமது மங்கல மந்திரமே


மருதமலை மாமணியே முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா


தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்

பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..

தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்

பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..


மருதமலை மாமணியே முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா


கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ…

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்

நாடியென் வினை தீர நான் வருவேன்

நாடியென் வினை தீர நான் வருவேன்


அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக

எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக

எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..


மருதமலை மாமணியே முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா


சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்

பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்

பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்


பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே

பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே


காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்

காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா

காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்

காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா


அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே


பனியது மழையது நதியது கடலது

சகலமும் உந்தொரு கருணையில் எழுவது

பனியது மழையது நதியது கடலது

சகலமும் உனதொரு கருணையில் எழுவது

வருவாய் குகனே வேலய்யா ஆஆ…


மருதமலை மாமணியே முருகய்யா

தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா..


Adi Meedhu Adi Vaithu Murugan song lyrics in Tamil

Maruthamalaiku neenga vanthu paarunga song lyrics in Tamil

Thiruchendurin Kadalorathil murugan devotional songs lyrics tamil

Thirupparangunrathil nee siriththaal murugan song lyrics in Tamil

Unnaithan Padavanthen Murugan song lyrics in Tamil

Thiruchendurin Kadalorathil Murugan Song Lyrics in Tamil | திருச்செந்தூரின் கடலோரத்தில் பாடல் வரிகள் | Deivam movie

 

திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்

தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்

தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்

திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்




அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்

ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும்

அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்

அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்

ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும்

அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்


திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்

தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்…


கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?….

குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?….

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?

குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?


மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று

வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று

சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கு முகம் ஒன்று

ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று

நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று

நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று


திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்

தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்


பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா

கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா

பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா

கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா

நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா

நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா

வருவாய் அருள் தருவாய் முருகா


Maruthamalai Sathiyama Song Lyrics in Tamil

Vetrivel Veeravel murugan song lyrics in Tamil

Veppilai Veppilai Amman devotional song lyrics in Tamil

Azhagendra Solluku Murugan song lyrics in Tamil

Kundrathile Kumaranukku song lyrics in Tamil

Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்

பண்ணிநேர் மொழியாள் உமை பங்கரோ.....ஓ ஓ மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ... கண்ணினால் உமைக் காண கதவினை... திண்ணமாக திறந்தருள் செய்மினேன்... பிர...