sivan mantra லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sivan mantra லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 மே, 2026

Thiruvembaavai song lyrics in Tamil | திருவெம்பாவை பாடல் வரிகள் தமிழில்

 

திருவெம்பாவை பாடல் 1


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை

யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்



Thiruvembaavai


திருவெம்பாவை பாடல் 2


பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்

பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே

நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்

சீசி இவையுஞ் சிலவோ விளையாடி

ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்

கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்

தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்

ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 3


முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்

அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்

பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்

புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே

எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே

சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை

இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்


திருவெம்பாவை பாடல் 4


ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை

கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்

உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்

தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 5


மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்

போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்

கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று

ஓலம் இடினும் உணராய் உணராய்காண்

ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்


திருவெம்பாவை பாடல் 6


மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை

நானே எழுப்புவன் என்றலும் நாணாமே

போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ

வானே நிலனே பிறவே அறிவரியான்

தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்

வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்

ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்


திருவெம்பாவை பாடல் 7


அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்

உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்

சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்

தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்

என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்

சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ

வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 8


கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?

வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 9


முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே

உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்

உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம் கணவர் ஆவார்

அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்

இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 10


பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்

வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்

கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்

ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்

ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 11


மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்

கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி

ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்

ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!

சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!

ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்

எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 12


ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்

ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப

பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்

எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்


திருவெம்பாவை பாடல் 13


பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்

அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து

நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்

பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 14


காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

கோதை குழலாட வண்டின் குழாம் ஆட

சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி

வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி

சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி

ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி

பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்

பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 15


ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே

நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்

சித்தம் களிகூர நீரொருகால் ஓவா

நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து

அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்

பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்

ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்

வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 16


முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்

என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்

மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்

பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்

தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு

முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே

என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்


திருவெம்பாவை பாடல் 17


செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்

கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி

இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை

அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்

பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 18


அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்

கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்

தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல

பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி

கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி

பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 19


உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று

அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்

எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க

எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க

கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க

இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்

எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 20


போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.


Sivan 108 Potri in Tamil

Kolaru Pathigam

Sivapuranam


செவ்வாய், 26 மே, 2026

Sivan Moola Mantra in Tamil | சிவன் மூல மந்திரம் தமிழில்

 


Sivan Moola Mantra in Tamil



1008 names of lord Shiva

Om Mantra Chanting

Sivapuranam

Pradosha Shivan Mantra in Tamil | பிரதோஷ சிவன் மந்திரம் தமிழில்

 


Pradosham Sivan Mantra in Tamil



Perumal Slogam in Tamil

Kali Gayatri Mantra

1008 Names of Shiva Lingam

Paavangal neengum Sivan Mantra tamil | பாவங்கள் நீங்கும் சிவன் மந்திரம் தமிழில்

 


Sivan Mantra tamil



Maha Mrityunjay Mantra

Garudan Gayatri Mantra

Perumal Slogam in Tamil

Idarinum Thalarinum Sivan Mantra Lyrics in Tamil | இடரினும் தளரினும் சிவன் பாடல் வரிகள் தமிழில்

 



Idarinum Thalarinum Sivan Mantra in Tamil


இடரினுந் தளரினும் எனதுறுநோய்

தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்

கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை

மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோஎமை யாளுமா

றீவதொன் றெமக்கில்லையேல்

அதுவோவுன தின்னருள்

ஆவடு துறையரனே….1



வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்

வீழினும் உனகழல் விடுவேனல்லேன்

தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்

போழிள மதிவைத்த புண்ணியனே

இதுவோஎமை யாளுமா

றீவதொன் றெமக்கில்லையேல்

அதுவோவுன தின்னருள்

ஆவடு துறையரனே….2


நனவினுங் கனவினும் நம்பாவுன்னை

மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்

புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த

கனலெரி யனல்புல்கு கையவனே

இதுவோஎமை யாளுமா

றீவதொன் றெமக்கில்லையேல்

அதுவோவுன தின்னருள்

ஆவடு துறையரனே….3




தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்

அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்

கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்

மும்மதிள் எரியெழ முனிந்தவனே

இதுவோஎமை யாளுமா

றீவதொன் றெமக்கில்லையேல்

அதுவோவுன தின்னருள்

ஆவடு துறையரனே….4



கையது வீழினுங் கழிவுறினுஞ்

செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்

கொய்யணி நறுமலர் குலாயசென்னி

மையணி மிடறுடை மறையவனே

இதுவோஎமை யாளுமா

றீவதொன் றெமக்கில்லையேல்

அதுவோவுன தின்னருள்

ஆவடு துறையரனே….5


வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்

எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா

ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த

சந்தவெண் பொடியணி சங்கரனே

இதுவோஎமை யாளுமா

றீவதொன் றெமக்கில்லையேல்

அதுவோவுன தின்னருள்

ஆவடு துறையரனே….6


வெப்பொடு விரவியோர் வினைவரினும்

அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா

ஒப்புடை யொருவனை உருவழிய

அப்படி அழலெழ விழித்தவனே

இதுவோஎமை யாளுமா

றீவதொன் றெமக்கில்லையேல்

அதுவோவுன தின்னருள்

ஆவடு துறையரனே….7




பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்

சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்

ஏருடை மணிமுடி இராவணனை

ஆரிடர் படவரை யடர்த்தவனே

இதுவோஎமை யாளுமா

றீவதொன் றெமக்கில்லையேல்

அதுவோவுன தின்னருள்

ஆவடு துறையரனே….8


உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்

ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்

கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்

அண்ணலும் அளப்பரி தாயவனே

இதுவோஎமை யாளுமா

றீவதொன் றெமக்கில்லையேல்

அதுவோவுன தின்னருள்

ஆவடு துறையரனே….9


பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்

அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்

புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்

பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே

இதுவோஎமை யாளுமா

றீவதொன் றெமக்கில்லையேல்

அதுவோவுன தின்னருள்

ஆவடு துறையரனே….10



அலைபுனல் ஆவடு துறையமர்ந்த

இலைநுனை வேற்படை யெம்மிறையை

நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன

விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்

வினையாயின நீங்கிப்போய்

விண்ணவர் வியனுலகம்

நிலையாகமுன் னேறுவர்

நிலமிசை நிலையிலரே….11


Perumal Slogam in Tamil

Garudan Gayatri Mantra

Powerful Hayagreevar Mantra



Powerful Shiva Mantra tamil | சக்தி வாய்ந்த சிவன் மந்திரம் தமிழில்

 


Powerful Shivan Mantra in Tamil



Kandhar Anupoothi

Lakshmi Narasimmar Mantra

Perumal Slogam in Tamil

Sivan Mantra | சிவன் மந்திரம்

 


Shivan Mantra



Lakshmi Narasimmar Mantra

Perumal Slogam in Tamil

Chakratthalwar Mantra

சனி, 16 ஆகஸ்ட், 2025

Thiruneetru Pathigam | திருநீற்றுப் பதிகம் – சிவபெருமானின் அருள்பாடல்


தமிழ் சைவ சமயத்தில் மிகுந்த பக்தியுடன் பாடப்படும் பாடல்களில் ஒன்றாகும் திருநீற்றுப் பதிகம். இதைத் திருஞானசம்பந்தர் அருளிச் செய்தார். இறைவனின் திருநீற்றின் மகிமையை உணர்த்தி, அதனை அணிவோர்க்கு கிடைக்கும் அருளையும் நன்மைகளையும் புகழ்ந்து பாடும் சிறப்பு கொண்டது திருநீற்றுப் பதிகம் ஆகும்.

Sivan Gayatri Mantra


Thiruneetru Pathigam Video Song


திருநீற்றின் சிறப்பு


திருநீறு (விபூதி) என்பது சிவபெருமானின் பிரசாதமாகக் கருதப்படுகிறது. இதனை உடலில் பூசுவதன் மூலம்:


  • மனம் பாவமிலா நிலையில் நிலைத்து விடுகிறது.


  • உடல், மனம், ஆன்மா அனைத்தும் தூய்மையடைகிறது.


  • பிறவி பந்தங்கள் விலகி, இறைவனின் அருள் அடையலாம்.


  • துன்பங்கள், நோய்கள், பயம் ஆகியவை விலகும்.


திருநீற்றைப் பூசுவது ஒரு சாதாரண வழிபாடு அல்ல; அது ஆன்மீக சக்தியை தரும் ஒரு பெரிய சின்னமாகும்.


திருநீற்றுப் பதிகம் பாடல் வரிகள் 


Sahasra Lingam with blue background


மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே… (1)


Shiva lingam in river water


வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு

போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு

ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு

சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே… (2)


Ancient Shiva lingam images


முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு

சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு

பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு

சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே… (3)


Shiva Lingam in nature


காண இனியது நீறு கவினைத் தருவது நீறு

பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு

மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு

சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே… (4)


Shiva Lingam with Kumkum Decoration


பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு

பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்

ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு

தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே… (5)


Ancient days Shiva lingam statue

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு

வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு

பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு

திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே… (6)


Shiva Lingam on rock images

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு

பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு

துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு

அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே… (7)


Shiva Lingam with green background

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு

பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு

தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு

அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே… (8)


Ancient times Shiva lingam statue


மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு

மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு

ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு

ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே… (9)


Seven chakras Shiva Lingam images


குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட

கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு

எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு

அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே… (10)


Shiva Lingam images in rainfall


ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்

போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்

தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்

சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே… (11)


திருநீற்றுப் பதிகத்தின் அர்த்தம்


திருஞானசம்பந்தர் பாடிய இப்பதிகம், சிவபெருமான் அருளால் உலக வாழ்வில் அனைத்து நன்மைகளையும், இறுதியில் முக்தியையும் (மோட்சம்) அளிக்கும் என்பதை எடுத்துரைக்கிறது. இதில்:


1.சிவபெருமான் உலகிற்கு அருள் புரிவது


2.பக்தர்களின் பாவங்களை நீக்குவது


3.ஆன்மாவின் உயர்ந்த நிலையை வழங்குவது


எனப் பல்வேறு தத்துவங்கள் புகழப்பட்டுள்ளன.


திருநீற்றுப் பதிகம் பாடுவதன் பயன்


1.வீட்டில் தினமும் திருநீற்றுப் பதிகத்தை பாடினால், குடும்பத்தில் அமைதி நிலைக்கும்.


2.நோய்கள், துன்பங்கள் நீங்கி, ஆரோக்கியமும் வளமும் கிடைக்கும்.


3.ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.


4.இறைவனின் அருள் எப்போதும் நம்மோடு இருக்கும்.


திருநீற்றுப் பதிகம் என்பது பாசுரங்களின் தொகுப்பாக மட்டுமல்ல; அது பக்தர்களுக்கான சிவபெருமானின் அருள் தரும் ஓர் ஆன்மீக நெறி ஆகும். திருநீற்றைப் பூசி, தினமும் இப்பதிகத்தைப் பாடுவதன் மூலம் வாழ்வில் சுபீட்சமும் அமைதியும் நிலைத்திருக்கும்.



வியாழன், 7 ஆகஸ்ட், 2025

லிங்காஷ்டகம் – சிவபெருமானின் மஹிமையை போற்றும் எட்டு பாடல்கள்

லிங்காஷ்டகம் என்பது சிவபெருமானின் அருளை பெற மிகவும் முக்கியமான பாடல்களில் ஒன்றாகும். இது எட்டு பாடல்களைக் கொண்ட ஸ்தோத்திரமாகும். இந்த பாடல்களில், சிவலிங்கத்தின் மகிமையும், அதனை தரிசிப்பதன் பலன்களும் வலியுறுத்தப்படுகின்றன.


Lingashtakam Video song

லிங்காஷ்டகத்தின் சிறப்பு

  • இந்த பாடலை ஆதி சங்கரர் இயற்றியதாக நம்பப்படுகிறது.
  • ஒவ்வொரு பாகதிலும் “லிங்கம்” என்ற வார்த்தை புனிதமாக சொல்லப்படுகிறது.
  • சிவலிங்கத்தின் சக்தி, கருணை, தர்மம் ஆகியவற்றை இது விளக்குகிறது.

அர்த்தம் மற்றும் பலன்

1. லிங்காஷ்டகத்தை தினமும் பாராயணம் செய்வதன் மூலம் பாபங்கள் நாசமாகும் என நம்பப்படுகிறது.

2. இது மனஅமைதி, ஆன்மீக உயர்வு மற்றும் சிவபெருமானின் கிருபை பெற வழிவகுக்கும்.

3. ஞானமும் மோக்ஷமும் கிடைக்கும் என புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sivan devotional images


லிங்காஷ்டகம் (Lingashtakam) – பாடலும் தமிழ்ப்பொருளும்

ப்ரஹ்மமுராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

பொருள்:

நான்முகப் பிரம்மனாலும், முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும், எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம், பிறப்பு – இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.

சிவன் காயத்ரி மந்திரம் images


தேவமுனி ப்ரவார்ச்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

பொருள்:

தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து, பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம், இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

Sivan lingam in water images


ஸர்வஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

பொருள்:

எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம், உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம், சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

Sivan lingam Lingashtakam images


கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

பொருள்:

மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம், நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம், தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

Sivan lingam images hd quality tamil


குங்குமசந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

பொருள்:

குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம், தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம், பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

Sivan lingam images tamil


தேவகணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவையர் பக்தி பிரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

பொருள்:

அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம், உணர்வுடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம், கோடி சூரியன்களின் ஒளியினைக் கொண்டிருக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

Sivan lingam Rameswaram images


அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

பொருள்:

எட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம், எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம், எட்டு விதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

Sivan lingam images hd quality tamil


ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம் பரமபர பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

லிங்காஷ்டக மிதம் புண்யம் யஹ் படேச் சிவ ஸந்நிதெள
சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே

பொருள்:

தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம், தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது, இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால், சிவலோகம் கிடைக்கும், சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.



Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்

பண்ணிநேர் மொழியாள் உமை பங்கரோ.....ஓ ஓ மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ... கண்ணினால் உமைக் காண கதவினை... திண்ணமாக திறந்தருள் செய்மினேன்... பிர...