Welcome to our devotional blog, your daily source of spiritual inspiration, prayers, and positive living. We share devotional songs, stories, mantras, temple information, festivals, and faith-based guidance to inspire peace and inner strength. Join us on a journey of devotion, spirituality, and divine blessings every day.
வெள்ளி, 15 மே, 2026
புதன், 13 மே, 2026
நாளெல்லாம் உந்தன் திருநாளே பெருமாள் பக்தி பாடல் வரிகள் | Naalellam Unthan song lyrics in Tamil | Thirumalai Deivam Movie
திருவேங்கடத்து முடியரசே
சீரார் கருணைத் திருமாலே
பொருளாய் எழுந்த முழுமுதலே
புவனங்காக்கும் பெருமாளே…..
அருளால் உலகை அளந்தவனே
அன்பர் பிணிக்கு அருமருந்தே
இறைவா உன்னைப் பாடுங்கால்
இன்பம் பொங்கும் என் மனமே…..
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே……
உன் நாமங்கள் கூறிவிட்டால் ஒரு கணமே
அவர் நாடிய வினைன் தீர்க்கும் நாரணனே
உன் நாமங்கள் கூறிவிட்டால் ஒரு கணமே
அவர் நாடிய வினைன் தீர்க்கும் நாரணனே
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே……
மலைபோல வரும் துன்பம்
பனிபோல மறைந்தோடும்
மலையேறி வருவோர்க்கு மன்னா
மலைபோல வரும் துன்பம்
பனிபோல மறைந்தோடும்
மலையேறி வருவோர்க்கு மன்னா
நலமில்லை என்றாலும் பலமில்லை என்றாலும்
நானென்று உயிர் ஊட்டும் கண்ணா
உடல் நலமில்லை என்றாலும் பலமில்லை என்றாலும்
நானென்று உயிர் ஊட்டும் கண்ணா
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே……
முக்கண்ணன் மைத்துனனே மாயக்கண்ணனனே
முக்தி தரும் சக்திக்கு சொந்த அண்ணனே
முக்கண்ணன் மைத்துனனே மாயக்கண்ணனனே
முக்தி தரும் சக்திக்கு சொந்த அண்ணனே
வேலவனின் மாமனான மாலவனே
வேங்கடத்தில் ஓங்கி நின்ற மூலவனே
வேலவனின் மாமனான மாலவனே
திருவேங்கடத்தில் ஓங்கி நின்ற மூலவனே
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே……
உண்டென்றும் இல்லையென்றும் சொல்வார்க்கு
உடன் காட்டும்
கண்கண்ட தெய்வமே வெங்கடேசா
உண்டென்றும் இல்லையென்றும் சொல்வார்க்கு
உடன் காட்டும்
கண்கண்ட தெய்வமே வெங்கடேசா
கொண்டாடும் அன்பர்க்கு குறைதீர செல்வங்கள்
தந்தாளும் தெய்வமே ஸ்ரீநிவாசா……
கொண்டாடும் அன்பர்க்கு குறைதீர செல்வங்கள்
தந்தாளும் தெய்வமே ஸ்ரீநிவாசா……
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே……
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே……
-
காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும், நிமல...
-
இந்தியாவின் ஆன்மிக மையமாக விளங்கும் காஞ்சிபுரம், “கல்யாண நகரம்” என்றும், “தேவகோட்டம்” என்றும் போற்றப்படுகிறது. அந்த நகரின் பெருமையைக் கூட்டு...
-
தமிழ்நாட்டின் ஆன்மீகத் தளங்களில் முதன்மையான இடத்தைப் பெறுவது திருவண்ணாமலை. இங்கு எழுந்திருக்கும் அண்ணாமலையார் மலையை சுற்றி நடப்பதே கிரிவலம்...