Murugan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Murugan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

உன்னைத்தான் பாடவந்தேன் ... பாடல் வரிகள் | Unnaithaan Paada Vanthen song lyrics in tamil


உன்னைத்தான் பாடவந்தேன் ...

வண்ணமயில் வேல்முருகா

உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ...

என்ன சொல்லிப் பாடுவதோ ...

என்ன சொல்லிப் பாடுவதோ



உன்னைத்தான் பாடவந்தேன் ...

வண்ணமயில் வேல்முருகா

உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ...

என்ன சொல்லிப் பாடுவதோ ...

என்ன சொல்லிப் பாடுவதோ


பழமுதிரும் சோலை வந்தேன் ...

மனமுருகி பாடி நின்றேன் (x2)

பழநிமலை ஓடி வந்தேன் ... அழகு தமிழ்

பாடி நின்றேன் (x2)

திருத்தணிக்கு தேடி வந்தேன் ...

திருக்காட்சி காணவந்தேன் (x2)


உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ...

என்ன சொல்லிப் பாடுவதோ ...

என்ன சொல்லிப் பாடுவதோ


Murugan images with temple background


தினைப்புனத்தைக் காத்துநின்ற ...

அனைவரையும் கேட்டுவந்தேன் (x2)

திருப்பபரங்குன்றூர் வந்தேன் ...

தென்குமரி தேவைவந்தேன் (x2)

ஆறுபடை வீதியெல்லாம் ... நூறுமுறை

சென்றுவந்தேன் (x2)


உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ...

என்ன சொல்லிப் பாடுவதோ ...

என்ன சொல்லிப் பாடுவதோ


உன்னைத்தான் பாடவந்தேன் ...

வண்ணமயில் வேல்முருகா

உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ...

என்ன சொல்லிப் பாடுவதோ ...

என்ன சொல்லிப் பாடுவதோ



வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

கந்த குரு கவசம் பாடல் வரிகள் | Kandha Guru Kavasam Lyrics in tamil


கந்த குரு கவசம் என்பது முருகன் பக்தர்களின் இதயத்தில் நிலைத்து நிற்கும் ஓர் அரிய பக்திப் பாடல். "கவசம்" என்பதன் பொருள் பாதுகாப்பு. எப்படி ஒரு போர்வீரன் தன்னைப் பாதுகாக்க கவசம் அணிவாரோ, அதுபோல் கந்த குரு கவசம் பக்தர்களின் மனம், உடல், ஆன்மாவை பாதுகாக்கும் தெய்வீக அருள்கவசமாகும்.

Kandha Sasti Kavasam Lyrics in tamil

கந்த குரு கவசம் முருகன் படம்

பாடலின் சிறப்பு


கந்த குரு கவசத்தில், முருகபெருமான் தனது வாளால் அறம் காத்து, தன் ஆறுபடைகளாலும் பக்தர்களுக்கு அருள் செய்யும் விதத்தில் வர்ணிக்கப்படுகிறார். பாடலை ஓதுவதன் மூலம், பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்கள், நோய்கள், விரோதங்கள், தீயசக்திகள் அனைத்தும் விலகும்.


ஓதும் முறை


1.அதிகாலை நேரம் சுத்தமான இடத்தில் அமர்ந்து ஓத வேண்டும்.


2.முருகனின் புகைப்படம் அல்லது சிலையின் முன் விளக்கேற்றி ஓதுவது சிறந்தது.


3.தினமும் குறைந்தது ஒரு முறை ஓதினாலும் பயன் கிடைக்கும்.


4.சுபமுகூர்த்த நாட்கள், கிருத்திகை, சஷ்டி, மற்றும் பவுர்ணமி நாட்களில் ஓதுவது மிகப்பெரும் பலனளிக்கும்.



அருளின் அனுபவம்


பக்தர்கள், கந்த குரு கவசத்தை பக்தியுடன் தினமும் ஓதும் போது, முருகன் தனது அருளால் தங்களைச் சுற்றி ஒரு தெரியாத பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவதாக நம்பப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகள் மெதுவாக குறைந்து, மனதில் அமைதி நிறையும்.


கந்த குரு கவசம் ஓதுவதன் நன்மைகள்


1.பாதுகாப்பு – மனம், உடல், ஆன்மாவை துன்பத்திலிருந்து காப்பாற்றும்.


2.ஆரோக்கியம் – நோய்கள், மனஅழுத்தம் விலகும்.


3.ஆத்திக வளம் – வாழ்க்கையில் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி ஏற்படும்.


4.ஆன்மீக உயர்வு – பக்தியின் பாதையில் நிலைத்து நிற்க உதவும்.


5.சக்தி வளர்ச்சி – தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும்.


கந்த குரு கவசம் பாடல் வரிகள்:


முருகன் வேல் மற்றும் ஆறுபடை வீடு images


கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே

முஷிக வாகனனே மூலப் பொருளோனே

ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே

திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்

சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... (5)


சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்

கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்

அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.


ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்

சரவணபவ குகா சரணம் சரணம் ...... (10)


குருகுகா சரணம் குருபரா சரணம்

சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்

தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே

ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே

தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... (15)


அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்

அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே

அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்

தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா

ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... (20)


கந்த குரு கவசம் ஓதும் பக்தர்


காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா

போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா

போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி

போற்றி போற்றி முருகா போற்றி

அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் ...... (25)


தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்

ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்

சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை

அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்

திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ...... (30)


ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண

அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்

அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே

வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்

வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே ...... (35)


தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே

திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா

பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்

திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்

செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் ...... (40)


அருணகிரிநாதர் கந்த குரு கவசம் images


அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே

அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா

திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்

திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்

எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை ...... (45)


பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்

எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே

எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ

என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்

திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா ...... (50)


அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்

திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா

ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்

செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்

சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் ...... (55)


குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா

குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்

பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா

பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா

விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா ...... (60)


முருகன் கிருத்திகை நட்சத்திர வழிபாடு images


வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே

வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்

கதிர்க்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்

காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்

மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் ...... (65)


கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்

குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்

வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்

வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்

ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் ...... (70)


ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்

அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்

அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்

பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு

பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் ...... (75)


அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே

படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே

உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்

உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்

அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் ..... (80)


சஷ்டி விரதம் மற்றும் முருகன் பூஜை


அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்

அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்

சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்

வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ

யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ ...... (85)


யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ

உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே

சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா

அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்

நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் ...... (90)


பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்

உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்

யானென தற்ற மெய்ஞ் ஞானமது அருள்வாய் நீ

முக்திக்கு வித்தான முருகா கந்தா

சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா ...... (95)


ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா

ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்

தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்

சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்

பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ ...... (100)


திருச்செந்தூர் முருகன் ஆலயம்

ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ

அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்

உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா

தேவாதி தேவா சிவகுரோ வா வா வா

வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா ...... (105)


காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்

வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே

மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்

அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்

அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் ..... (110)


உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்

அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்

வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்

உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்

அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா ...... (115)


அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு

சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு

சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு

அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு

அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு ...... (120)


பழனி முருகன் ஆலயம்


அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்

ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா

தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து

நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து

பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் ...... (125)


அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்

அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ

சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள

சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்

சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் ...... (130)


சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே

சிவசத் குருநாதா சிவசத் குருநாதா

ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்

தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு

திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் ...... (135)


சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு

கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்

தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்

தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்

தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் ..... (140)


முருக பக்தி மற்றும் அருள்

மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்

வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்

வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்

வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே

பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் ...... (145)


என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்

நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்

புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்

கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்

நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் ..... (150)


செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்

கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்

உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்

நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்

பற்களைக் கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் ...... (155)


கழுத்தைக் கந்தன் கைகளால் காக்கட்டும்

தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்

கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்

மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்

மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் ...... (160)


கந்த குரு கவசம் புத்தகம்


ஹ்ருதயத்தில் கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்

உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்

நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு

இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்

புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே ...... (165)


உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்

தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்

அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்

என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்

முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் ...... (170)


பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே

ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்

க்லெளம் ஸெளம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்

ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா

ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ...... (175)


ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா

முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்

மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்

முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்

முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா ...... (180)

 

முருகன் தங்க வேல் மற்றும் கவசம்

ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே

இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு

முலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா

காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா

சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் ...... (185)


தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்

ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே

முலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா

அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்

எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் ...... (190)


முவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்

பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ

கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா

கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே

ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே ...... (195)


வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே

வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்

சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்

அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே

அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... (200)


கந்த குரு கவசம் பாடும் சிறுவன்


சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்

நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்

மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ

வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ

பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா ...... (205)


பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்

பழனியில் நீயும் பழம்ஜோதி ஆனாய் நீ

பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே

பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்

திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் ...... (210)


பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்

ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ

குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்

கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே

ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே ...... (215)


பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்

பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்

தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்

எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் ..

.... (220)


மலர் அலங்காரத்துடன் முருகன் சிலை

சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே

சரவண பவனே சரவண பவனே

உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்

உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா

என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் ...... (225)


சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்

இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்

இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்

மனதை அடக்க வழி ஒன்றும் அறிந்திலேன் நான்

ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே ...... (230)


சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்

காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்

சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்

நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்

திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே ...... (235)


திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே

திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்

நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்

நித்யானந்தமே நின்னுரு வாகையினால்

அத்வைத ஆனந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் ...... (240)


கந்த குரு கவசம் தமிழ்ப் பாடல் வரிகள்

ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்

ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்

மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்

வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்

தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் ...... (245)


துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்

பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்

இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்

ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்

அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா ...... (250)


மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்

கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே

ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை

இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ

என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே ...... (255)


அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா

வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ

அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே

சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்

ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ ...... (260)


முருகன் சித்திரம் மற்றும் வேல் சின்னம்


ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனக்கிடுவாய்

அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்

அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா

அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு

அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ...... (265)


உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே

உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்

எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ

அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்

அன்பே சிவமும் அன்பே சக்தியும் ...... (270)


அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்

அன்பே தேவரும் அன்பே மனிதரும்

அன்பே நீயும் அன்பே நானும்

அன்பே சத்தியம் அன்பே நித்தியம்

அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் ...... (275)


அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்

அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்

அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்

எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா

அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ...... (280)


முருகன் பக்தர்கள் சஷ்டி வழிபாடு

ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்

முவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே

ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்

ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு

இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு ...... (285)


எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்

முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே

நம்பினேன் உ ன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ

உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்

நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் ..... (290)


விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே

நடுனெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்

ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்

சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்

சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா ...... (295)


ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்

மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்

கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ

கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே

கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா ...... (300)


கந்த குரு கவசம் தமிழ் புத்தக அட்டைப்படம்

கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ

மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ

சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே

சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே

பழனியில் போகருமே பாரோர் வாழப் பிரதிஷ்டித்தான் ...... (305)


புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ

கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா

கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே

கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே

உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ...... (310)


ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்

பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்

கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்

சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் ...... (315)


கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்

ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்

அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமுல மானகுரோ

அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்

சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே ...... (320)


கந்த குரு கவசம் ஆராதனை நிகழ்ச்சி


பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா

பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய்

மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ

சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்

ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா ...... (325)


சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா

பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ

திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ

குமரா முருகா குருகுகா வேலவனே

அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை ...... (330)


கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான்

ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ

ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்

போகருக்கருள் செய்த புவன சுந்தரனே

தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா ...... (335)


ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே

தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே

ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே

கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ

ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம் ...... (340)


கந்த குரு கவசம் போஸ்டர் வடிவம்

உன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்

கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே

கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்

புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை

திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக ...... (345)


புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்

நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்

நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்

முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்

உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் ...... (350)


அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா

முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா

அப்பப்பா முருகாநின் அருளே உலகமப்பா

அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன்

ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் ...... (355)


முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு

ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்

சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர்

சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா

வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ ...... (360)


முருகன் தீப ஆராதனை

சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்

சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்

சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா

சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல

ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு ...... (365)


சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ

சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு

அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்

திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்

ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ ...... (370)


பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்

பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு

இம்மையிலும் மறுமையிலும் இமையோருன்னைப் போற்றிடுவர்

முவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர்

அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா ...... (375)


சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா

கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே

பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே

கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்

கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் ...... (380)


முருகன் வள்ளி தெய்வானை சமேதம்

கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே

சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ

ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு

அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும்

ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் ...... (385)


வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்

பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்

சாந்தியும் செளக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே

ஸ்கந்தகுரு கவசமிதை கருத்து நிறுத்தி ஏற்றுவீரேல்

கர்வம் காமம் குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் ...... (390)


முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்

அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும்

ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்

கள்ளமிலா உள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை

சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் ...... (395)


பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்

கந்தகுரு கவசமிதை ஒரு மண்டலம் நிஷ்டையுடன்

பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்

திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று

காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் ..... (400)


Lord Murugan Valli Marriage

ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ

கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே

உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான

இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை

துன்பம் அகன்று விடும் தொந்தரவுகள் நீங்கிவிடும் ...... (405)


இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்

பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து

காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே

கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை

இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் ...... (410)


தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்

போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்

ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்

அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்

ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் ...... (415)


உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவன்

தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி

எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்

ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து

தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே ..... (420)


கந்த குரு கவசம் புத்தகம் மற்றும் ஜெபமாலை

கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே

கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே

கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை

பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்

ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் ...... (425)


ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும்

இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்

முன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு

நான்குமுறை தினம் ஓதி நல்லவரம் பெறுவீர்

ஐந்துமுறை தினம் ஓதி பஞ்சாட்சரம் பெற்று ...... (430)


ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்

ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்

எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்தியும் கிட்டும்

ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்

பத்துதரம் ஓதி நித்தம் பற்றற்று வாழ்வீரே ...... (435)


கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்

கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்

முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்

நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்

கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் ...... (440)


Lord Murugan utsavar images


கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி

உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன்

சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்

கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே

கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் ...... (445)


கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்

பாராயணம் செய்து உலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர்....... (447)


ஸ்ரீ கந்த குரு கவசம் முற்றிற்று.


கந்த குரு கவசம் என்பது வெறும் பாடல் அல்ல; அது முருக பக்தர்களின் ஆன்மிக கவசம். இதனை பக்தியுடன், மனநிறைவுடன் ஓதினால், முருகப்பெருமான் தனது அருளால் எப்போதும் காக்கிறார்.


"வாழ்க முருக பக்தி! வளர்க முருகன் அருள்!"

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

முருகன் காயத்ரி மந்திரம் – ஆன்மிக சக்தியின் அருள் வார்த்தைகள்

 முருகன் அல்லது ஸ்கந்தன், கார்த்திகேயன் எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் இவர், தமிழர்களின் பெரும் பற்று பெற்ற தெய்வமாக விளங்குகிறார். அறிவு, தைரியம், ஆரோக்கியம், காப்பு ஆகியவற்றின் அருளாளனாகப் போற்றப்படும் முருகனுக்கு பல மந்திரங்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது முருகன் காயத்ரி மந்திரம் ஆகும்.


Murugan Gayatri Mantra 


"ஓம் தத் புருஷாய வித்மஹே  

மஹாசேனாய தீமஹி  

தந்நோ சண்முக பிரசோதயாத்"


மந்திரத்தின் அர்த்தம்


ஓம் – பரம்பொருளின் புனித ஒலி


தத் புருஷாய வித்மஹே – அந்த தெய்வீக உருவத்தை தியானிக்கின்றோம்


மஹாசேனாய தீமஹி – தேவர்களின் படையை வழிநடத்தும் தலைவனை தியானிக்கின்றோம்


தந்நோ சண்முக பிரசோதயாத் – அந்த சண்முகன் எங்களை அறிவிலும், ஆன்மிகத்திலும் முன்னேற்றுவாராக


Murugan Gayatri Mantra images


பாராயண விதி


  • சஷ்டி மற்றும் அமாவாசை நாட்கள் சிறந்தவை
  • காலை அல்லது மாலை நேரங்களில் சுத்தமான மனதுடன் ஜபிக்க வேண்டும்
  • 108 முறை அல்லது குறைந்தது 9 முறை உரைக்கலாம்
  • சிவன், சக்தி, கணபதி வழிபாட்டின் பின் முருகன் காயத்ரி ஜபிக்க பரிந்துரைக்கப்படுகிறது

முருகன் காயத்ரி மந்திரம் ஜப நன்மைகள்


  1. அறிவுத்திறன் அதிகரிக்கும்
  2. மன அமைதி மற்றும் தைரியம் பெறும்
  3. தடைகள், சோதனைகள் அகலும்
  4. ஆன்மிக வளர்ச்சி அடையும்
  5. வெற்றி மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும்

முருகன் காயத்ரி மந்திரம் பக்தர்களுக்கு ஆன்மிக சக்தி, அறிவு, மற்றும் தைரியம் அளிக்கும் ஒரு புனித வழி. தினசரி பக்தியுடன் ஜபித்தால் வாழ்க்கையில் நம்பிக்கையும் நன்மைகளும் பெருகும்.



செவ்வாய், 22 ஜூலை, 2025

அருள் தொட்ட வாழ்க்கை


முன்னுரை:

எத்தனை முயற்சிகள் செய்தாலும் பலனின்றி தோல்வி தரும் தருணங்கள் உண்டு. ஆனால் அந்த ஒரு அருள் தொட்ட நிமிடம் – வாழ்வை முழுமையாக மாற்றிவிடும்.

‎இது தான் "அருள் தொட்ட வாழ்க்கையின்" உண்மை அழகு.

அருள் என்பது என்ன?

அருள் என்பது நாம் கேட்டுத் தரப்படும் பரிசு அல்ல.

‎அது இறைவனுடைய சுயநிலையான அன்பு, எதற்கும் எதிர்பார்க்காமல் நம்மை நலமாக்கும் புனித சக்தி.

‎"பக்தியின் மீது பூரண நம்பிக்கை வைத்தவரை, அருள் விலகாது."


அருள் தரும் சின்னங்கள்:

  • வழியில் எச்சரிக்கும் ஓர் எண்ணம்
  • ‎திடீரென அமைதி தரும் ஜபம்
  • ‎நம்மிடம் அன்போடு பேசும் ஒருவர்
  • தாமதமானாலும் தரும் தீர்வு

 இவை அனைத்தும் அருளின் தாக்கம்.

 

முருகனின் அருள்:

முருகனின் அருள் என்பது ‎செய்யாத தவங்களுக்கும் கிடைக்கும் ஆழ்ந்த பரிசு.

‎"ஓம் சரவணபவா நமஹா" என்ற மந்திரம், வாழ்க்கையின் குழப்பத்தை அகற்றும் சக்தி கொண்டது.

அந்த மந்திரத்தை தினமும் 108 முறை சொல்வது, ‎அருள் பெறும் அருமையான வழி. 

Saravanabhava 108 times 

அருளின் பயணம்:


  1. ‎முதலில் நம்பிக்கை பிறக்கும்.
  2. ‎பின்பு பிரார்த்தனை வெளிப்படும்.
  3. ‎அதன் பின் அமைதி நிலை செய்கிறது.
  4. ‎அருளின் தாக்கம் வாழ்க்கை முழுவதும் தெரியும்.

 

உண்மை சிந்தனை:


‎"அருளுடன் நடக்கும் வாழ்க்கை, தடைகளை எல்லாம் தொடக்கங்களாக மாற்றும்."

அது தான் அருள் தொட்ட வாழ்க்கை.

‎நாம் அறிந்துகொள்ளும் முன்னே, அது நம்மை ஏற்கெனவே தொட்டிருக்கும்.

 

பக்தியில் கடந்து செல்வோம்:


  • ‎தினமும் புனித பாடல்கள் கேளுங்கள்
  • ‎ஒரு நாள் விரதம் வைத்துப் பிரார்த்தியுங்கள்
  • ‎நன்றியோடு பேசுங்கள்
  • ‎மற்றவருக்கு உதவி செய்யுங்கள்

இவை அனைத்தும் அருள் வரவேற்கும் வழிகள்.


‎முடிவுரை:


இறைவன் நம்மை தொட்டால் மட்டுமல்ல, நாம் அவனை நம்பும்போதும் அருள் உண்டு.

‎அந்த நம்பிக்கையின் ஒளி, நம்மை வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் வழி நடத்தும்.

அருள் தொட்ட வாழ்க்கை என்பது…

‎வாழ்க்கையை இறைவனிடம் ஒப்படைத்து, அதனருளில் ஒளிர்வது தான்.


🙏நன்றியுடன் 🙏 

ஈசன் ஆசிப்பெற்றவள்‌ 

சனி, 19 ஜூலை, 2025

‎கந்த சஷ்டி கவசம் | Kandha Sasti Kavasam Lyrics in tamil

 

காப்பு


‎துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்

‎பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்

‎நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்

‎சஷ்டி கவசம் தனை.


‎அமர ரிடர்தீர அமரம் புரிந்த

‎குமரனடி நெஞ்சே குறி.


முருகனின் கந்த சஷ்டி கவசம் தமிழ் பாடல் மற்றும் பக்தி படம்











நூல்


‎சஷ்டியை நோக்கச் சரவண பவனார்

‎சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்

‎பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

‎கீதம் பாடக் கிண்கிணி யாட


‎மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்

‎கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து

‎வரவர வேலா யுதனார் வருக

‎வருக வருக மயிலோன் வருக


‎இந்திரன் முதலா எண்டிசை போற்றி

‎மந்திர வடிவேல் வருக வருக!

‎வாசவன் மருகா வருக வருக

‎நேசக் குறமகள் நினைவோன் வருக


‎ஆறுமுகம் படைத்த ஐயா வருக

‎நீறிடும் வேலவன் நித்தம் வருக

‎சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!

‎சரவண பவனார் சடுதியில் வருக


‎ரஹண பவச ர ர ர ர ர ர ர

‎ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி

‎விநபவ சரஹண வீரா நமோநம

‎நிபவ சரஹண நிறநிற நிறென


‎வசர வணப வருக வருக

‎அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

‎என்னை ஆளும் இளையோன் கையில்

‎பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்


‎பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க

‎விரைந்தெனைக் காக்க வேலோன் வருக

‎ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்

‎உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்


‎கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்

‎நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்

‎சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்

‎குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக!




ஆறு முகமும் அணிமுடி ஆறும்

‎நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்

‎பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்

‎நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்


‎ஈராறு செவியில் இலகுகுண் டலமும்

‎ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்

‎பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து

‎நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்


‎முப்புரி நூலும் முத்தணி மார்பும்

‎செப்பழ குடைய திருவயி றுந்தியும்

‎துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்

‎நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்


‎இருதொடை யழகும் இணைமுழந் தாளும்

‎திருவடி யதனில் சிலம்பொலி முழங்க

‎செககண செககண செககண செகண

‎மொகமொக மொகமொக மொகமொக மொகென


‎நகநக நகநக நகநக நகென

‎டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

‎ரரரர ரரரர ரரரர ரரர

‎ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி


‎டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

‎டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

‎விந்து விந்து மயிலோன் விந்து

‎முந்து முந்து முருகவேள் முந்து


‎என்றனை யாளும் ஏரகச் செல்வ

‎மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்

‎லாலா லாலா லாலா வேசமும்

‎லீலா லீலா லீலா வினோ தனென்று


‎உன் திருவடியை உறுதியென் றெண்ணும்

‎எந்தலை வைத்துன் இணையடி காக்க

‎என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க

‎பன்னிரு விழியால் பாலனைக் காக்க


‎அடியேன் வதனம் அழகுவேல் காக்க

‎பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

‎கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க

‎விழி செவி இரண்டும் வேலவர் காக்க


‎நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க

‎பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

‎முப்பத் திருபல் முனைவேல் காக்க

‎செப்பிய நாவைச் செவ்வேல் காக்க


‎கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க

‎என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

‎மார்பை ரத்ன வடிவேல் காக்க

‎சேரிள முலைமார் திருவேல் காக்க


‎வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க

‎பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க

‎அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

‎பழுபதி னாறும் பருவேல் காக்க


‎வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

‎சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க

‎நாணாங் கயிற்றை நல்வேல் காக்க

‎ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க


‎பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

‎வட்டக் குதத்தை வடிவேல் காக்க

‎பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கந்த சஷ்டி கவசம் தமிழில் – முருகன் அருள் பெறும் பாடல் படம்










கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

‎ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க

‎கைகளி ரண்டும் கருணைவேல் காக்க


‎முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க

‎பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க

‎நாவில் சரஸ்வதி நற்றுணை யாக

‎நாபிக் கமலம் நல்வேல் காக்க

‎முப்பால் நாடியை முனைவேல் காக்க


‎எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க

‎அடியேன் வசனம் அசைவுள நேரம்

‎கடுகவே வந்து கனகவேல் காக்க

‎வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க

‎அரையிருள் தன்னில் அனையவேல் காக்க


‎ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க

‎தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க

‎காக்க காக்க கனகவேல் காக்க

‎நோக்க நோக்க நொடியில் நோக்க

‎தாக்க தாக்க தடையறக் தாக்க


‎பார்க்க பார்க்க பாவம் பொடிபட

‎பில்லி சூனியம் பெரும்பகை அகல

‎வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

‎அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

‎பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்


‎கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்

‎பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்

‎அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

‎இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்

‎எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்


‎கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்

‎விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்

‎தண்டியக் காரரும் சண்டாளர் களும்

‎என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட


‎ஆனை யடியினில் அரும்பா வைகளும்

‎பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

‎நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்

‎பாவைக ளுடனே பலகல சத்துடன்


‎மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

‎ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்

‎காசும் பணமும் காவுடன் சோறும்

‎ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்


‎அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

‎மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

‎காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட

‎அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட


‎வாய்விட் டலறி மதிகெட் டோட

‎படியினில் முட்ட பாசக் கயிற்றால்

‎கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு

‎கட்டி உருட்டு கைகால் முறிய


‎கட்டு கட்டு கதறிடக் கட்டு

‎முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட

‎செக்கு செக்கு செதில் செதிலாக

‎சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு


‎குத்து குத்து கூர்வடி வேலால்

‎பற்று பற்று பகலவன் தணலெரி

‎தணலெரி தணலெரி தணலது வாக

‎விடு விடு வேலை வெகுண்டது வோடப்


‎புலியும் நரியும் புன்னரி நாயும்

‎எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட

‎தேளும் பாம்பும் செய்யான் பூரான்

‎கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்


‎ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க

‎ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்

‎வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்

‎சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு


‎குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி

‎பக்கப் பிளவை படர்தொடை வாழை

‎கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

‎பற்குத் தரணை பருஅரை யாப்பும்


‎எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

‎நில்லா தோட நீஎனக் கருள்வாய்

‎ஈரேழு உலகமும் எனக் குறவாக

‎ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா


‎மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்

‎உன்னைத் துதிக்க உன் திரு நாமம்

‎சரவண பவனே சைலொளி பவனே

‎திரிபுர பவனே திகழொளி பவனே


‎பரிபுர பவனே பவமொளி பவனே

‎அரிதிரு மருகா அமரா வதியைக்

‎காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்

‎கந்தா குகனே கதிர்வே லவனே


‎கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

‎இடும்பனை யழித்த இனியவேல் முருகா

‎தனிகா சலனே சங்கரன் புதல்வா

‎கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா


‎பழநிப் பதிவாழ் பாலகு மாரா

‎ஆவினன் குடிவாழ் அழகிய வேலா

‎செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா

‎சமரா புரிவாழ் சண்முகத் தரசே


‎காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

‎என்நா இருக்க யானுனைப் பாட

‎எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்

‎பாடினேன் ஆடினேன் பரவச மாக


‎ஆடினேன் நாடினென் ஆவினன் பூதியை

‎நேச முடன்யான் நெற்றியில் அணிய

‎பாச வினைகள் பற்றது நீங்கி

‎உன்பதம் பெறவே உன்னரு ளாக


‎அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்

‎மெத்தமெத் தாக வேலா யுதனார்

‎சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க

‎வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க


‎வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

‎வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க

‎வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்

‎வாழ்க வாழ்க வாரணத் துவசம்


‎வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க

‎எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

‎எத்தனை அடியேன் எத்தனை செயினும்

‎பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்


‎பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே

‎பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து

‎மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்

‎தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்


‎கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

‎பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்

‎காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

‎ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி


‎நேசமுடன் ஒரு நினைவது வாகிக்

‎கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்

‎சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்

‎ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு

‎ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய


‎அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்

‎திசைமன்ன ரெண்மர் செயலாது அருளுவர்

‎மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்


‎நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்

‎நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்

‎எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார்

‎கந்தர்கை வேலாம் கவசத் தடியை


‎வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்

‎விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்

‎பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்

‎நல்லோர் நினைவில் நடனம் புரியும்





‎சர்வ சத்ரு சங்கா ரத்தடி

‎அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்

‎வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்

‎சூரபத் மாவைத் துணித்தகை யதனால்

‎இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த


‎குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்

‎சின்னக் குழந்தை சேவடி போற்றி!

‎எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்


‎மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

‎தேவர்கள் சேனா பதியே போற்றி!

‎குறமகள் மனமகிழ் கோவே போற்றி!

‎திறமிகு திவ்விய தேகா போற்றி!


‎இடும்பா யுதனே இடும்பா போற்றி!

‎கடம்பா போற்றி கந்தா போற்றி!

‎வெட்சி புனையும் வேலே போற்றி!

‎உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!


‎மயில்நட மிடுவோர் மலரடி சரணம்!

‎சரணம் சரணம் சரவண பவஓம்

‎சரணம் சரணம் சண்முகா சரணம்!

‎சரணம் சரணம் சண்முகா சரணம்!

ஷஷ்டி விரதத்தின் மகிமை மற்றும் அதன் பலன்கள்

ஷஷ்டி விரதம் (Shashti Viratham) என்பது முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான விரதங்களில் ஒன்றாகும். குறிப்பாக சுப்பிரமண்ய சு...