சனி, 2 மே, 2026

சந்தன மல்லிகையில் தூளி கட்டிபோட்டேன் பாடல் வரிகள் | Santhana Malligaiyil Song Lyrics in Tamil


சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்
தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ
வேப்பில வீசிகிட்டு பாட்டு சொல்லுறேனே
கேட்டு நீ கண்வளரு தாலேலல்லேலோ
இந்த உலகை ஆளும் தாயிக்கு
செல்ல பிள்ள நானிருக்கேன்
என் கவல தீர்க்க வேண்டாமா கண்வளரு தாயி


Santhana Malligaiyil Song Lyrics in Tamil 


சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்
தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ

பாம்பே தலையணதான் வேப்பிலையே பஞ்சு மெத்த
ஆத்தா கண்வளர ஆரிராரோ பாடும் புள்ள
எந்த ஒரு பிள்ளைக்குமே இந்த வரம் கெடைக்கல
ஆனந்தம் பொங்குதம்மா விட்டு விட்டு கண்ணுல
தாயி மகமாயி நான் என்ன கொடுத்து வச்சேன்
பாதம் திருப்பாதம்
அதில் நெஞ்ச எடுத்து வச்சேன்

சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்
தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ

ஒருவாய் சோறுனக்கு ஊட்டி விட்ட வேளையில

உலகம் பசி அடங்கி உறங்குதம்மா நேரத்துல
உதட்டு பருக்கையில ஒன்னு ரெண்டு சிந்துதடி
அதநான் ருசி பாத்தே மோட்சம் இங்கே வந்ததடி
தாயே இனி நீயே என் நெஞ்சினில் தங்கிவிடு
போகும் வழி யாவும் நீ எங்களின் கூட இரு

சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்
தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ
வேப்பில வீசிகிட்டு பாட்டு சொல்லுறேனே
கேட்டு நீ கண்வளரு தாலேலல்லேலோ
இந்த உலகை ஆளும் தாயிக்கு
செல்ல பிள்ள நானிருக்கேன்
என் கவல தீர்க்க வேண்டாமா கண்வளரு தாயி

சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்
தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pudhukottai bhuvanaeshwari song lyrics | புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் பாடல் வரிகள் | Rajakali Amman Movie

Pudhukottai bhuvanaeshwari Bhuvanaeshwaram jagatheeshwari Mannadiyin malleeshwari Nanga nalloor rajeshwari Paagaeshwari yogeshwari logaeshwa...