புதன், 13 மே, 2026

Pallikattu Sabarimalaiku Ayyappan Song Lyrics in Tamil | பள்ளிக்கட்டு சபரிமலைக்கு ஐயப்பன் பக்தி பாடல் வரிகள்

 

இருமுடி தாங்கி ஒரு மனதாகி

குருவெனவே வந்தோம்

இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம்





பள்ளிக் கட்டு சபரிமலைக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

ஸ்வாமியே ஐயப்போ

ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்!


நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே

கற்பூர தீபம் ஸ்வாமிக்கே

ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு

ஐயனை நாடி சென்றிடுவார்

சபரி மலைக்கு சென்றிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ

ஐயப்போ ஸ்வாமியே!


கார்த்திகை மாதம் மாலை அணிந்து

நேர்த்தியாகவே விரதம் இருந்து

பார்த்த சாரதியின் மைந்தனே

உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து


பார்த்த சாரதியின் மைந்தனே

உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து

இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி

அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ

ஐயப்போ ஸ்வாமியே!


அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்

வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்

கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்

கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ

ஐயப்போ ஸ்வாமியே!


கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி

சங்கரன் மகனை கும்பிடுவார்

சஞ்சலமின்றி ஏறிடுவார்

நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்

காலமெல்லாம் நமக்கே அருட்

காவலனாய் இருப்பார்


தேக பலம் தா பாத பலம் தா

தேக பலம் தா பாத பலம் தா

தேக பலம் தா என்றால் அவரும்

தேகத்தை தந்திடுவார்

பாத பலம் தா என்றால் அவரும்

பாதத்தை தந்திடுவார்

நல்ல பாதையைக் காட்டிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ

ஐயப்போ ஸ்வாமியே!


சபரி பீடமே வந்திடுவார் சபரி

அன்னையை பணிந்திடுவார்

சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்

சபரி மலைதனில் நெருங்கிடுவார்

பதினெட்டு படி மீது ஏறிடுவார்

கதியென்று அவனை சரணடைவார்

மதி முகம் கண்டே மயங்கிடுவார்

ஐயனைத் துதிக்கையிலே

தன்னையே மறந்திடுவார்


பள்ளிக் கட்டு சபரிமலைக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

ஸ்வாமியே ஐயப்போ

ஐயப்போ ஸ்வாமியே!


Lalitha Sahasranaman

Mahalakshmi Mantra

Vel Maral maha Mantra

Murugan Miracles

Vinaayagar Agaval lyrics in Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக