ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

Thiruppavai 30 Pasuram with Tamil Lyrics | திருப்பாவை முப்பது பாடல் வரிகளுடன்


Thiruppavai 30 Pasuram with Tamil Lyrics

கருடனின் மகிமைகள்

நோய் பயம் நீங்க தன்வந்திரி பகவான் மந்திரம்


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;


நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!


சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!


கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,


ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,


கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்


நாரா யணனே, நமக்கே பறைதருவான்,


பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். (1)


Kamatchi Amman Temple History


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்


செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்


பையத் துயின்ற பரமன் அடிபாடி,


நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி


மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;


செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;


ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி


உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய். (2)


Thiruppaavai Aandaal nachiyar images



ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி


நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,


தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து


ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்


பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,


தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி


வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்


நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய். (3)



ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்


ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,


ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து


பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்


ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,


தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்


வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்


மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (4)



மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,


தூய பெருநீர் யமுனைத் துறைவனை,


ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,


தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,


தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது


வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்


போய பிழையும் புகுதருவான் நின்றனவும்


தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய். (5)



புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்


வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?


பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,


கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,


வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,


உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்


மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்


உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். (6)



கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து


பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!


காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து


வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்


ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?


நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி


கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?


தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய். (7)



கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு


மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்


போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்


கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய


பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு


மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய


தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்


ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். (8)


Aandaal beautiful images with peacock in her hand


தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,


தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்


மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;


மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்


ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?


ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?


‘மாமாயன், மாதவன், வைகுந்தன்’ என்றென்று


நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய். (9)



நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!


மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?


நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்


போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்


கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்


தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?


ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!


தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய். (10)



கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,


செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்


குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!


புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,


சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்


முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,


சிற்றாதே பேசாதே செல்லப்பெண் டாட்டிநீ


எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய். (11)



கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி


நினைத்து முலைவழியே நின்றுபால் சோர


நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!


பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச்


சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற


மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!


இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?


அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். (12)



புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்


கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,


பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;


வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;


புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!


குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,


பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்


கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். (13)



உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்


செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்;


செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,


தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்;


எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்


நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!


சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்


பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய். (14)


Aandaal images with green colour background


எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?


சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;


‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’


‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’


‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’


‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’


வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க


வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய். (15)



நாயக னாய்நின்ற நந்தகோபனுடைய


கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண


வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;


ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை


மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;


தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;


வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ


நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய். (16)



அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்


எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;


கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!


எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;


அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த


உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்;


செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!


உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய். (17)



உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,


நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!


கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;


வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்


பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;


பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,


செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப


வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (18)



குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்


மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்


கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்


வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;


மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை


எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,


எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,


தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய். (19)



முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று


கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;


செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு


வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;


செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்


நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்;


உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை


இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய். (20)



ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப


மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்


ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;


ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்


தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;


மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்


ஆற்றாதுவந்து உன்னடிபணியு மாபோலே,


போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய். (21)


Aandaal dreaming images


அங்கண் மாஞாலத் தரசர் அபிமான


பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே


சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;


கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே,


செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?


திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,


அங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்


எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய். (22)



மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்


சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,


வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,


மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்,


போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன்


கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய


சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த


காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய். (23)



அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,


சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,


பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,


கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,


குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,


வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,


என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்


இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய். (24)



ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்


ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,


தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த


கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்


நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை


அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்


திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி


வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (25)


Aandaal and perumal mirror images


மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்


மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்


ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன


பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே


போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,


சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,


கோல விளக்கே, கொடியே, விதானமே,


ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய். (26)



கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை


பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;


நாடு புகழும் பரிசினால் நன்றாக,


சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே


பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;


ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு


மூடநெய் பெய்து முழங்கை வழிவார


கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். (27)



கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;


அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்


பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;


குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு


உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!


அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்


சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,


இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய். (28)



சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்


பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;


பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ


குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;


இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!


எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு


உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;


மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். (29)



வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்


திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி


அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப்


பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன


சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே


இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்


செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்


எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய். (30)






சனி, 30 ஆகஸ்ட், 2025

Kamatchi Amman Temple History | காமாட்சி அம்மன் ஸ்தல வரலாறு


இந்தியாவின் ஆன்மிக மையமாக விளங்கும் காஞ்சிபுரம், “கல்யாண நகரம்” என்றும், “தேவகோட்டம்” என்றும் போற்றப்படுகிறது. அந்த நகரின் பெருமையைக் கூட்டும் முக்கிய ஆலயம் ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் கோவில் ஆகும். காமாட்சி அம்மன் தனி ஆலயமாக அருள்பாலிக்கும் சில தலங்களில், காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் திருக்கோவில் முதலிடம் பெறுகிறது.



காமாட்சி அம்பாளின் மகிமை


கா” என்பது சரஸ்வதியை, 

மா” என்பது மகாலட்சுமியை, 

அச்சி” என்பது சக்தியைக் குறிக்கும். 

இத்தகைய மூன்று தேவிகளின் சங்கமமாக ஸ்ரீ காமாட்சி அம்பாள் அருள்பாலிக்கிறார்.


1. சரஸ்வதியின் அறிவும்,


2. மகாலட்சுமியின் செல்வ வளமும்,


3. பார்வதியின் சக்தியும்


இவைகளை ஒரே வடிவில் பெற்ற தேவியாக காமாட்சி திகழ்கிறார்.


ஸ்தல வரலாறு


புராணக் கதைகளின்படி, பார்வதி தேவியை சிவபெருமான் பரீட்சிக்கும்படி இங்கு தபம் செய்ய வைத்தார். சிவனைத் திருமணம் செய்யும் நோக்கில், பார்வதி வில்வமரம் அடியில் பஞ்சாக்ஷர ஜபம் செய்து தவம் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிவபெருமான் அவரது பக்தி பரிசோதனை செய்ய கலியுகத்தில் உலகிற்கு அருள்புரியும் வாக்குத்தத்தம் அளித்தார்.


Kamatchi Amman beautiful images


மேலும், இங்கு காமாட்சி அம்மன் சுக்லவர்ணத்தில் (வெள்ளை நிறத்தில்) அருள்பாலிப்பது சிறப்பு. அம்பாளின் கையில் பாசம், அங்குசம், சர்ப்பம், கற்பகக் கள்பம் என பல ஆயுதங்களுடன் தரிசனமளிக்கிறார்.


ஆலய சிறப்புகள்


  • காமாட்சி அம்மன் ஆலயம், 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.


  • இங்கு முக்கானங்களில் மூன்று சன்னதிகள் – காமாட்சி அம்மன், துர்கை, பங்குனி உத்திர திருவிழாவிற்கான உற்சவ மூர்த்தி ஆகியவை உள்ளன.

ஆடி வெள்ளி அம்மன் அலங்காரம் படம்


  • சுக்லபட்ச வெள்ளிக்கிழமைகள் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகின்றன.


  • மாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் மற்றும் காமாட்சி அம்மன் திருக்கல்யாணம் பெரும் சிறப்புடையவை.


பக்தர்கள் அனுபவம்


காமாட்சி அம்மனை வணங்கினால்,


  • அறிவு வளர்ச்சி,


  • வளமும் ஆரோக்கியமும்,


  • குடும்ப நலனும்,


  • திருமண யோகமும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.


பல பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள், பிரச்சனைகள் காமாட்சி அம்மன் அருளால் நீங்கியுள்ளதை அனுபவமாக கூறுகின்றனர்.


காமாட்சி அம்மன் கோவில், ஆன்மிகத் தலம் மட்டுமல்ல; அது பக்தர்களின் மனதிற்கு வலிமை அளிக்கும் தெய்வீக சக்தி மையமாக விளங்குகிறது. காஞ்சிபுரம் சென்றவர்கள், நிச்சயம் காமாட்சி அம்மனை தரிசித்து, அன்னையின் அருள் பெற்றிட வேண்டும்.

சனி, 23 ஆகஸ்ட், 2025

Vinaayagar Agaval Lyrics in Tamil | விநாயகர் அகவல் மந்திரம் பாடல் வரிகள்



சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாடப்

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)


தெய்வம் பேசும் தருணங்கள்


வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)


Vinaayagar sathurththi vazhipaadu images


இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)


அருள் தொட்ட வாழ்க்கை


இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)


Ganapati Mantra images


குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)


Kandha Sasti Kavasam Lyrics in tamil


தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)


Golden Ganesha images high resolution


தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)


Kandha Guru Kavasam Lyrics in tamil


பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)


Vinaayagar Images with glittering galaxy images


குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)


Gayatri Mantra and its benefits


குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)


Vinaayagar Images with candle light background


புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)


Murugan Gayatri Mantra


முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)

இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)


Dazzling vinayagar images with sun rays fall on him


எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)


Lingashtakam


கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)


Ganapati Mantra


தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)


ஓம் விக்ன விநாயகா போற்றி…


வியாழன், 21 ஆகஸ்ட், 2025

வாழ்வு ஆனவள் துர்கா பாடல் வரிகள் | Rahu Kala Durga Ashtakam Lyrics in Tamil


“துர்கா” என்ற சொல்லுக்கு “எல்லா துயரங்களையும், கஷ்டங்களையும் கடக்கச் செய்பவள்” என்று பொருள். அன்னையை அழைக்கும் ஸ்தோத்திரங்கள், துதியல்கள், மந்திரங்கள் ஆகியவற்றில் "துர்கா அஷ்டகம்" முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. துர்கை அம்மன், அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநிறுத்துபவள்; அவள் கருணை, சக்தி, பாதுகாப்பு ஆகியவற்றின் வடிவமாக திகழ்கிறாள்.



துர்கா அஷ்டகத்தின்  முக்கியத்துவம்


  • துர்கை அம்மனை துதித்து பாடப்படும் அஷ்டகம், பக்தரின் மனத்தில் நம்பிக்கை மற்றும் உறுதியை ஏற்படுத்துகிறது.


  • பயம், துக்கம், நோய், பகைவர் தொந்தரவு போன்றவற்றிலிருந்து விடுபட வைக்கும்.


  • மன அமைதி, ஆன்மீக வலிமை, தெய்வீக அருள் ஆகியவற்றை அளிக்கும்.


  • நவராத்திரி, வெள்ளிக்கிழமை, அமாவாசை போன்ற நாள்களில் இதனைச் சாத்தினால் சிறப்பான பலன்களை வழங்கும்.


அமாவாசை துர்க்கை அம்மன் வழிபாடு

பாடும் முறை


துர்கா அஷ்டகத்தை பக்தியுடன் காலை நேரத்தில் அல்லது சாயங்காலத்தில் சுத்தமான இடத்தில் அமர்ந்து ஜபிக்க வேண்டும். மனதில் துர்கை தேவியின் திவ்ய ரூபத்தை தியானித்து, மெதுவாகவும் தெளிவாகவும் அஷ்டகத்தைச் சொல்ல வேண்டும்.


துர்க்கை அஷ்டகம்


வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்

வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்

தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள்

தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!


உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள்

உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்

நிலவில் நின்றவள் துர்கா நித்யை ஆனவள்

நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!


செம்மையானவள் துர்கா ஜெபமும் ஆனவள்

அம்மையானவள் அன்புத் தந்தை ஆனவள்

இம்மையானவள் துர்கா இன்பம் ஆனவள்

மும்மையானவள் என்றும் முழுமை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!


உயிருமானவள் துர்கா உடலும் ஆனவள்

உலகமானவள் துர்கா எந்தன் உடமை ஆனவள்

பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்

பண்பு பொங்கிட என்றும் பழுத்த துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!


துன்பம் அற்றவள் துர்கா துரிய வாழ்பவள்

துறையும் ஆனவள் இன்பத் தோணி யானவள்

அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள்

நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!


குருவும் ஆனவள் துர்கா குழந்தை யானவள்

குலமும் ஆனவள் எங்கள் குடும்ப தீபமே

திருவும் ஆனவள் துர்கா திருசூலி மாயவள்

திருநீற்றில் என்னிடம் திகழும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!


ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்

ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்

ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்

ராகு துர்கையே எனைக் காக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!


கன்னி துர்கையே இதய கமல துர்கையே

கருணை துர்கையே வீரக் கனக துர்கையே

அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே

அன்பு துர்கையே ஜெய துர்க்கை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!


பலன்கள்


  • பக்தரின் வாழ்க்கையில் நேர்மறை சக்தியை உருவாக்கும்.


  • வீடு, குடும்பம், தொழில் அனைத்திலும் வளம், செழிப்பு, ஆரோக்கியம், அமைதி ஆகியவற்றை நிலைநிறுத்தும்.


  • மனதில் தைரியம், விடாமுயற்சி, நம்பிக்கை ஆகியவற்றை ஊட்டுகிறது.


துர்கா அஷ்டகத்தை என்பது சாதாரண மந்திரம் அல்ல; அது தெய்வீக சக்தியுடன் நம்மை இணைக்கும் பாலமாகும். அதை பக்தியுடன் தினமும் சாத்தினால், அன்னை துர்கையின் அருள் எப்போதும் நம்மோடு இருந்து நம்மை பாதுகாத்து வழிநடத்தும்.


செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

உன்னைத்தான் பாடவந்தேன் ... பாடல் வரிகள் | Unnaithaan Paada Vanthen song lyrics in tamil


உன்னைத்தான் பாடவந்தேன் ...

வண்ணமயில் வேல்முருகா

உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ...

என்ன சொல்லிப் பாடுவதோ ...

என்ன சொல்லிப் பாடுவதோ



உன்னைத்தான் பாடவந்தேன் ...

வண்ணமயில் வேல்முருகா

உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ...

என்ன சொல்லிப் பாடுவதோ ...

என்ன சொல்லிப் பாடுவதோ


பழமுதிரும் சோலை வந்தேன் ...

மனமுருகி பாடி நின்றேன் (x2)

பழநிமலை ஓடி வந்தேன் ... அழகு தமிழ்

பாடி நின்றேன் (x2)

திருத்தணிக்கு தேடி வந்தேன் ...

திருக்காட்சி காணவந்தேன் (x2)


உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ...

என்ன சொல்லிப் பாடுவதோ ...

என்ன சொல்லிப் பாடுவதோ


Murugan images with temple background


தினைப்புனத்தைக் காத்துநின்ற ...

அனைவரையும் கேட்டுவந்தேன் (x2)

திருப்பபரங்குன்றூர் வந்தேன் ...

தென்குமரி தேவைவந்தேன் (x2)

ஆறுபடை வீதியெல்லாம் ... நூறுமுறை

சென்றுவந்தேன் (x2)


உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ...

என்ன சொல்லிப் பாடுவதோ ...

என்ன சொல்லிப் பாடுவதோ


உன்னைத்தான் பாடவந்தேன் ...

வண்ணமயில் வேல்முருகா

உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ...

என்ன சொல்லிப் பாடுவதோ ...

என்ன சொல்லிப் பாடுவதோ



திங்கள், 18 ஆகஸ்ட், 2025

Thiruvannaamalai Kirivalam and its benefits | திருவண்ணாமலை கிரிவலம் மற்றும் அதன் நன்மைகள்

 தமிழ்நாட்டின் ஆன்மீகத் தளங்களில் முதன்மையான இடத்தைப் பெறுவது திருவண்ணாமலை. இங்கு எழுந்திருக்கும் அண்ணாமலையார் மலையை சுற்றி நடப்பதே கிரிவலம் அல்லது கிரிவலப் பயணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரிவலம் புனிதமான சிவ வழிபாட்டின் மிகச் சிறந்த வடிவமாக கருதப்படுகிறது.


Thiruvannaamalai annaamalaiyaar thirukkoil images

அண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பு

Annaamalaiyaar video song

திருவண்ணாமலையில் எழுந்திருக்கும் அருணாசல மலையே பரமசிவனின் உருவமாகக் கருதப்படுகிறது. இந்த மலையை சுற்றி நடப்பதால் சிவபெருமானின் அருள் எளிதில் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.


  • ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்தில் ஈடுபடுவர்.


  • சுமார் 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த பயணம் ஆன்மீக அனுபவத்தை தருகிறது.


  • கிரிவலம் நடக்கும் போது "அண்ணாமலை" எனும் நாமம் ஜபிக்கப்படுகிறது.


கிரிவலத்தின் நன்மைகள்

1. ஆன்மிக நன்மைகள்

  • மனக்குழப்பங்கள் அகன்று, ஆன்ம சாந்தி கிடைக்கும்.

  • கர்ம பந்தங்கள் கரைகின்றன.

  • சிவபெருமானின் அருள் எளிதில் பெறப்படுகிறது.

Annaamalaiyaar picture with pond


2. உடல் நன்மைகள்

  • 14 கி.மீ தூரம் நடப்பதால் உடலுக்கு நல்ல உடற்பயிற்சி கிடைக்கிறது.

  • இரத்த ஓட்டம் சீராகி, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

  • மன அழுத்தம் குறைந்து, உடல் புத்துணர்ச்சி பெறும்.


3. சமூக நன்மைகள்

  • அனைவரும் சேர்ந்து கிரிவலம் செய்வதால் ஒற்றுமை அதிகரிக்கும்.

  • பக்தர்களுடன் நடந்து பேசுவதன் மூலம் நல்லிணக்கம் வளரும்.

  • தர்ம செயல் உணர்வு பிறக்கும்.

அண்ணாமலை கிரிவலம் என்பது சாதாரண நடைபயிற்சி அல்ல; அது ஆன்மிகமும் உடல்நலமும் தரும் தெய்வீகப் பயணம். பௌர்ணமி நாளில் கிரிவலம் செய்தால், சிவபெருமானின் அருள் பெருகும் என்று நம்பப்படுகிறது. ஆன்மிக வளர்ச்சி நாடுவோர் வாழ்க்கையில் குறைந்தது ஒருமுறையாவது அண்ணாமலை கிரிவலத்தில் ஈடுபட வேண்டும்.



ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

சூரியன் காயத்ரி மந்திரம் – அர்த்தமும் பலன்களும்


சூரிய பகவான் உலகின் ஒளி, உயிரின் ஆதாரம், சக்தி மற்றும் ஆரோக்கியத்தின் தந்தை என போற்றப்படுகிறார். சூரியனை வணங்குவது என்பது நமது உடல், மனம், அறிவு ஆகியவற்றை சுத்தமாக்கி, நலமுடன் வாழ வழிகாட்டும் ஒரு தெய்வீக செயல் ஆகும்.


Gayatri Mantra and its benefits


காயத்ரி மந்திரங்களில் ஒன்று சூரியனுக்கானது. இதனை ஆதித்ய காயத்ரி மந்திரம் என்றும் அழைக்கப்படுகின்றது. 


Suriya Bhagavan Gayatri Mantra 


சூரியன் காயத்ரி மந்திரம்


"ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

பாச ஹஸ்தாய தீமஹி

தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்"


மந்திரத்தின் பொருள்


ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே – ஒளி மற்றும் உயிரின் ஆதாரமான ஆதித்யனை நாங்கள் தியானிக்கிறோம்.


பாச ஹஸ்தாய தீமஹி – பகலை உருவாக்கும் சூரியனை மனதில் நிறுத்துகிறோம்.


தன்னோ சூர்ய ப்ரசோதயாத் – அவர் எங்கள் அறிவையும் புத்தியையும் பிரகாசமாக்கட்டும்.


Suriyan Gayatri Mantra images


சூரியனை வழிபடுவதன் முக்கியத்துவம்


1.சூரியனின் அருள் ஆரோக்கியம், உயிர்சக்தி, நீண்ட ஆயுள் ஆகியவற்றை தருகிறது.


2.காலையில் சூரியனை நோக்கி மந்திரம் சொல்லுவதால் மனச்சாந்தி கிடைக்கிறது.


3.கல்வி, நினைவாற்றல், அறிவு வளர்ச்சி ஆகியவற்றில் உதவுகிறது.


4.உடலில் உள்ள வலி, சோர்வு, மன அழுத்தம் நீங்குகிறது.


5.சூரியனின் ஒளி நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை ஈர்க்கும் என நம்பப்படுகிறது


ஜபிக்கும் முறை


  • அதிகாலை சூரிய உதயம் நேரத்தில் கிழக்கு திசையை நோக்கி அமரவும்.


  • மனதை அமைதியாக வைத்து மூன்று முறை ஆழ்ந்த சுவாசம் எடுக்கவும்.


  • சூரியனை நேரடியாக பார்க்காமல், கைகளைக் கூப்பி மந்திரத்தை ஜபிக்கவும்.


  • தினமும் குறைந்தது 9 முறை முதல் 27 முறை வரை உச்சரிக்கலாம்.

சூரியன் காயத்ரி மந்திரம் என்பது உடல், மனம், ஆன்மா ஆகியவற்றுக்கு ஒளி, சக்தி, அறிவு ஆகியவற்றை அளிக்கும் சக்திவாய்ந்த மந்திரமாகும். சூரியனை வழிபட்டு இந்த மந்திரத்தை தினமும் சொல்லும் பழக்கம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.




சனி, 16 ஆகஸ்ட், 2025

Thiruneetru Pathigam | திருநீற்றுப் பதிகம் – சிவபெருமானின் அருள்பாடல்


தமிழ் சைவ சமயத்தில் மிகுந்த பக்தியுடன் பாடப்படும் பாடல்களில் ஒன்றாகும் திருநீற்றுப் பதிகம். இதைத் திருஞானசம்பந்தர் அருளிச் செய்தார். இறைவனின் திருநீற்றின் மகிமையை உணர்த்தி, அதனை அணிவோர்க்கு கிடைக்கும் அருளையும் நன்மைகளையும் புகழ்ந்து பாடும் சிறப்பு கொண்டது திருநீற்றுப் பதிகம் ஆகும்.

Sivan Gayatri Mantra


Thiruneetru Pathigam Video Song


திருநீற்றின் சிறப்பு


திருநீறு (விபூதி) என்பது சிவபெருமானின் பிரசாதமாகக் கருதப்படுகிறது. இதனை உடலில் பூசுவதன் மூலம்:


  • மனம் பாவமிலா நிலையில் நிலைத்து விடுகிறது.


  • உடல், மனம், ஆன்மா அனைத்தும் தூய்மையடைகிறது.


  • பிறவி பந்தங்கள் விலகி, இறைவனின் அருள் அடையலாம்.


  • துன்பங்கள், நோய்கள், பயம் ஆகியவை விலகும்.


திருநீற்றைப் பூசுவது ஒரு சாதாரண வழிபாடு அல்ல; அது ஆன்மீக சக்தியை தரும் ஒரு பெரிய சின்னமாகும்.


திருநீற்றுப் பதிகம் பாடல் வரிகள் 


Sahasra Lingam with blue background


மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே… (1)


Shiva lingam in river water


வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு

போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு

ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு

சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே… (2)


Ancient Shiva lingam images


முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு

சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு

பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு

சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே… (3)


Shiva Lingam in nature


காண இனியது நீறு கவினைத் தருவது நீறு

பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு

மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு

சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே… (4)


Shiva Lingam with Kumkum Decoration


பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு

பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்

ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு

தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே… (5)


Ancient days Shiva lingam statue

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு

வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு

பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு

திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே… (6)


Shiva Lingam on rock images

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு

பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு

துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு

அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே… (7)


Shiva Lingam with green background

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு

பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு

தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு

அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே… (8)


Ancient times Shiva lingam statue


மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு

மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு

ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு

ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே… (9)


Seven chakras Shiva Lingam images


குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட

கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு

எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு

அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே… (10)


Shiva Lingam images in rainfall


ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்

போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்

தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்

சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே… (11)


திருநீற்றுப் பதிகத்தின் அர்த்தம்


திருஞானசம்பந்தர் பாடிய இப்பதிகம், சிவபெருமான் அருளால் உலக வாழ்வில் அனைத்து நன்மைகளையும், இறுதியில் முக்தியையும் (மோட்சம்) அளிக்கும் என்பதை எடுத்துரைக்கிறது. இதில்:


1.சிவபெருமான் உலகிற்கு அருள் புரிவது


2.பக்தர்களின் பாவங்களை நீக்குவது


3.ஆன்மாவின் உயர்ந்த நிலையை வழங்குவது


எனப் பல்வேறு தத்துவங்கள் புகழப்பட்டுள்ளன.


திருநீற்றுப் பதிகம் பாடுவதன் பயன்


1.வீட்டில் தினமும் திருநீற்றுப் பதிகத்தை பாடினால், குடும்பத்தில் அமைதி நிலைக்கும்.


2.நோய்கள், துன்பங்கள் நீங்கி, ஆரோக்கியமும் வளமும் கிடைக்கும்.


3.ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.


4.இறைவனின் அருள் எப்போதும் நம்மோடு இருக்கும்.


திருநீற்றுப் பதிகம் என்பது பாசுரங்களின் தொகுப்பாக மட்டுமல்ல; அது பக்தர்களுக்கான சிவபெருமானின் அருள் தரும் ஓர் ஆன்மீக நெறி ஆகும். திருநீற்றைப் பூசி, தினமும் இப்பதிகத்தைப் பாடுவதன் மூலம் வாழ்வில் சுபீட்சமும் அமைதியும் நிலைத்திருக்கும்.



வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

கந்த குரு கவசம் பாடல் வரிகள் | Kandha Guru Kavasam Lyrics in tamil


கந்த குரு கவசம் என்பது முருகன் பக்தர்களின் இதயத்தில் நிலைத்து நிற்கும் ஓர் அரிய பக்திப் பாடல். "கவசம்" என்பதன் பொருள் பாதுகாப்பு. எப்படி ஒரு போர்வீரன் தன்னைப் பாதுகாக்க கவசம் அணிவாரோ, அதுபோல் கந்த குரு கவசம் பக்தர்களின் மனம், உடல், ஆன்மாவை பாதுகாக்கும் தெய்வீக அருள்கவசமாகும்.

Kandha Sasti Kavasam Lyrics in tamil

கந்த குரு கவசம் முருகன் படம்

பாடலின் சிறப்பு


கந்த குரு கவசத்தில், முருகபெருமான் தனது வாளால் அறம் காத்து, தன் ஆறுபடைகளாலும் பக்தர்களுக்கு அருள் செய்யும் விதத்தில் வர்ணிக்கப்படுகிறார். பாடலை ஓதுவதன் மூலம், பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்கள், நோய்கள், விரோதங்கள், தீயசக்திகள் அனைத்தும் விலகும்.


ஓதும் முறை


1.அதிகாலை நேரம் சுத்தமான இடத்தில் அமர்ந்து ஓத வேண்டும்.


2.முருகனின் புகைப்படம் அல்லது சிலையின் முன் விளக்கேற்றி ஓதுவது சிறந்தது.


3.தினமும் குறைந்தது ஒரு முறை ஓதினாலும் பயன் கிடைக்கும்.


4.சுபமுகூர்த்த நாட்கள், கிருத்திகை, சஷ்டி, மற்றும் பவுர்ணமி நாட்களில் ஓதுவது மிகப்பெரும் பலனளிக்கும்.



அருளின் அனுபவம்


பக்தர்கள், கந்த குரு கவசத்தை பக்தியுடன் தினமும் ஓதும் போது, முருகன் தனது அருளால் தங்களைச் சுற்றி ஒரு தெரியாத பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவதாக நம்பப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகள் மெதுவாக குறைந்து, மனதில் அமைதி நிறையும்.


கந்த குரு கவசம் ஓதுவதன் நன்மைகள்


1.பாதுகாப்பு – மனம், உடல், ஆன்மாவை துன்பத்திலிருந்து காப்பாற்றும்.


2.ஆரோக்கியம் – நோய்கள், மனஅழுத்தம் விலகும்.


3.ஆத்திக வளம் – வாழ்க்கையில் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி ஏற்படும்.


4.ஆன்மீக உயர்வு – பக்தியின் பாதையில் நிலைத்து நிற்க உதவும்.


5.சக்தி வளர்ச்சி – தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும்.


கந்த குரு கவசம் பாடல் வரிகள்:


முருகன் வேல் மற்றும் ஆறுபடை வீடு images


கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே

முஷிக வாகனனே மூலப் பொருளோனே

ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே

திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்

சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... (5)


சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்

கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்

அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.


ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்

சரவணபவ குகா சரணம் சரணம் ...... (10)


குருகுகா சரணம் குருபரா சரணம்

சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்

தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே

ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே

தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... (15)


அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்

அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே

அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்

தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா

ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... (20)


கந்த குரு கவசம் ஓதும் பக்தர்


காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா

போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா

போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி

போற்றி போற்றி முருகா போற்றி

அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் ...... (25)


தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்

ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்

சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை

அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்

திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ...... (30)


ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண

அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்

அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே

வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்

வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே ...... (35)


தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே

திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா

பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்

திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்

செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் ...... (40)


அருணகிரிநாதர் கந்த குரு கவசம் images


அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே

அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா

திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்

திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்

எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை ...... (45)


பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்

எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே

எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ

என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்

திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா ...... (50)


அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்

திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா

ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்

செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்

சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் ...... (55)


குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா

குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்

பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா

பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா

விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா ...... (60)


முருகன் கிருத்திகை நட்சத்திர வழிபாடு images


வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே

வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்

கதிர்க்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்

காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்

மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் ...... (65)


கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்

குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்

வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்

வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்

ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் ...... (70)


ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்

அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்

அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்

பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு

பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் ...... (75)


அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே

படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே

உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்

உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்

அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் ..... (80)


சஷ்டி விரதம் மற்றும் முருகன் பூஜை


அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்

அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்

சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்

வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ

யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ ...... (85)


யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ

உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே

சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா

அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்

நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் ...... (90)


பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்

உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்

யானென தற்ற மெய்ஞ் ஞானமது அருள்வாய் நீ

முக்திக்கு வித்தான முருகா கந்தா

சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா ...... (95)


ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா

ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்

தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்

சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்

பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ ...... (100)


திருச்செந்தூர் முருகன் ஆலயம்

ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ

அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்

உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா

தேவாதி தேவா சிவகுரோ வா வா வா

வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா ...... (105)


காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்

வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே

மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்

அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்

அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் ..... (110)


உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்

அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்

வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்

உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்

அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா ...... (115)


அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு

சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு

சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு

அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு

அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு ...... (120)


பழனி முருகன் ஆலயம்


அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்

ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா

தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து

நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து

பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் ...... (125)


அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்

அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ

சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள

சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்

சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் ...... (130)


சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே

சிவசத் குருநாதா சிவசத் குருநாதா

ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்

தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு

திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் ...... (135)


சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு

கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்

தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்

தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்

தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் ..... (140)


முருக பக்தி மற்றும் அருள்

மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்

வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்

வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்

வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே

பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் ...... (145)


என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்

நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்

புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்

கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்

நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் ..... (150)


செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்

கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்

உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்

நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்

பற்களைக் கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் ...... (155)


கழுத்தைக் கந்தன் கைகளால் காக்கட்டும்

தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்

கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்

மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்

மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் ...... (160)


கந்த குரு கவசம் புத்தகம்


ஹ்ருதயத்தில் கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்

உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்

நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு

இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்

புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே ...... (165)


உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்

தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்

அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்

என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்

முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் ...... (170)


பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே

ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்

க்லெளம் ஸெளம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்

ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா

ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ...... (175)


ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா

முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்

மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்

முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்

முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா ...... (180)

 

முருகன் தங்க வேல் மற்றும் கவசம்

ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே

இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு

முலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா

காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா

சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் ...... (185)


தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்

ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே

முலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா

அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்

எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் ...... (190)


முவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்

பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ

கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா

கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே

ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே ...... (195)


வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே

வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்

சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்

அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே

அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... (200)


கந்த குரு கவசம் பாடும் சிறுவன்


சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்

நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்

மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ

வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ

பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா ...... (205)


பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்

பழனியில் நீயும் பழம்ஜோதி ஆனாய் நீ

பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே

பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்

திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் ...... (210)


பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்

ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ

குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்

கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே

ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே ...... (215)


பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்

பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்

தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்

எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் ..

.... (220)


மலர் அலங்காரத்துடன் முருகன் சிலை

சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே

சரவண பவனே சரவண பவனே

உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்

உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா

என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் ...... (225)


சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்

இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்

இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்

மனதை அடக்க வழி ஒன்றும் அறிந்திலேன் நான்

ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே ...... (230)


சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்

காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்

சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்

நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்

திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே ...... (235)


திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே

திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்

நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்

நித்யானந்தமே நின்னுரு வாகையினால்

அத்வைத ஆனந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் ...... (240)


கந்த குரு கவசம் தமிழ்ப் பாடல் வரிகள்

ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்

ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்

மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்

வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்

தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் ...... (245)


துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்

பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்

இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்

ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்

அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா ...... (250)


மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்

கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே

ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை

இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ

என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே ...... (255)


அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா

வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ

அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே

சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்

ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ ...... (260)


முருகன் சித்திரம் மற்றும் வேல் சின்னம்


ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனக்கிடுவாய்

அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்

அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா

அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு

அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ...... (265)


உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே

உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்

எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ

அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்

அன்பே சிவமும் அன்பே சக்தியும் ...... (270)


அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்

அன்பே தேவரும் அன்பே மனிதரும்

அன்பே நீயும் அன்பே நானும்

அன்பே சத்தியம் அன்பே நித்தியம்

அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் ...... (275)


அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்

அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்

அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்

எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா

அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ...... (280)


முருகன் பக்தர்கள் சஷ்டி வழிபாடு

ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்

முவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே

ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்

ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு

இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு ...... (285)


எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்

முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே

நம்பினேன் உ ன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ

உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்

நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் ..... (290)


விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே

நடுனெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்

ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்

சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்

சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா ...... (295)


ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்

மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்

கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ

கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே

கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா ...... (300)


கந்த குரு கவசம் தமிழ் புத்தக அட்டைப்படம்

கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ

மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ

சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே

சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே

பழனியில் போகருமே பாரோர் வாழப் பிரதிஷ்டித்தான் ...... (305)


புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ

கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா

கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே

கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே

உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ...... (310)


ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்

பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்

கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்

சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் ...... (315)


கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்

ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்

அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமுல மானகுரோ

அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்

சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே ...... (320)


கந்த குரு கவசம் ஆராதனை நிகழ்ச்சி


பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா

பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய்

மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ

சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்

ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா ...... (325)


சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா

பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ

திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ

குமரா முருகா குருகுகா வேலவனே

அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை ...... (330)


கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான்

ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ

ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்

போகருக்கருள் செய்த புவன சுந்தரனே

தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா ...... (335)


ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே

தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே

ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே

கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ

ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம் ...... (340)


கந்த குரு கவசம் போஸ்டர் வடிவம்

உன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்

கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே

கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்

புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை

திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக ...... (345)


புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்

நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்

நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்

முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்

உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் ...... (350)


அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா

முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா

அப்பப்பா முருகாநின் அருளே உலகமப்பா

அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன்

ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் ...... (355)


முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு

ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்

சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர்

சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா

வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ ...... (360)


முருகன் தீப ஆராதனை

சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்

சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்

சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா

சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல

ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு ...... (365)


சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ

சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு

அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்

திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்

ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ ...... (370)


பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்

பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு

இம்மையிலும் மறுமையிலும் இமையோருன்னைப் போற்றிடுவர்

முவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர்

அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா ...... (375)


சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா

கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே

பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே

கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்

கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் ...... (380)


முருகன் வள்ளி தெய்வானை சமேதம்

கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே

சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ

ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு

அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும்

ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் ...... (385)


வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்

பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்

சாந்தியும் செளக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே

ஸ்கந்தகுரு கவசமிதை கருத்து நிறுத்தி ஏற்றுவீரேல்

கர்வம் காமம் குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் ...... (390)


முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்

அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும்

ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்

கள்ளமிலா உள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை

சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் ...... (395)


பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்

கந்தகுரு கவசமிதை ஒரு மண்டலம் நிஷ்டையுடன்

பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்

திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று

காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் ..... (400)


Lord Murugan Valli Marriage

ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ

கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே

உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான

இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை

துன்பம் அகன்று விடும் தொந்தரவுகள் நீங்கிவிடும் ...... (405)


இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்

பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து

காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே

கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை

இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் ...... (410)


தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்

போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்

ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்

அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்

ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் ...... (415)


உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவன்

தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி

எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்

ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து

தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே ..... (420)


கந்த குரு கவசம் புத்தகம் மற்றும் ஜெபமாலை

கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே

கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே

கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை

பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்

ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் ...... (425)


ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும்

இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்

முன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு

நான்குமுறை தினம் ஓதி நல்லவரம் பெறுவீர்

ஐந்துமுறை தினம் ஓதி பஞ்சாட்சரம் பெற்று ...... (430)


ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்

ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்

எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்தியும் கிட்டும்

ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்

பத்துதரம் ஓதி நித்தம் பற்றற்று வாழ்வீரே ...... (435)


கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்

கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்

முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்

நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்

கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் ...... (440)


Lord Murugan utsavar images


கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி

உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன்

சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்

கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே

கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் ...... (445)


கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்

பாராயணம் செய்து உலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர்....... (447)


ஸ்ரீ கந்த குரு கவசம் முற்றிற்று.


கந்த குரு கவசம் என்பது வெறும் பாடல் அல்ல; அது முருக பக்தர்களின் ஆன்மிக கவசம். இதனை பக்தியுடன், மனநிறைவுடன் ஓதினால், முருகப்பெருமான் தனது அருளால் எப்போதும் காக்கிறார்.


"வாழ்க முருக பக்தி! வளர்க முருகன் அருள்!"

ஷஷ்டி விரதத்தின் மகிமை மற்றும் அதன் பலன்கள்

ஷஷ்டி விரதம் (Shashti Viratham) என்பது முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான விரதங்களில் ஒன்றாகும். குறிப்பாக சுப்பிரமண்ய சு...